நகரத்தை சத்குருவைத் தவிர வேறு யாரும் இப்படி உணர்ந்திருக்க முடியாது. இந்த நகரத்தைப் பற்றி இவர் கூறும் கதைகள் நம்முள் பல கேள்விகளை எழுப்புகின்றன. அங்கு செல்ல வேண்டும் என்ற நம் ஆவலைத் தூண்டுகின்றன.

கைலாஷ் யாத்ரா - பகுதி 2

டாக்டர்.ராதா மாதவி:

லாசாவின் பொட்டலா பேலஸ்... தலாய்லாமாக்கள் வாழ்ந்த இடம்.

அங்கே செல்வதற்கு முன்பாக, வழியில் ஒரு சிறுநகரின் கடைத்தெருவில் இருந்த புத்த மடாலயத்தில் சத்குரு, தன்னுடன் வந்தவர்களை ஒரு வித்தியாசமான தியானத்தில் ஈடுபடுத்தினார். உள்ளுக்குள் ஆழமான அதிர்வுகளை உண்டாக்கிய அற்புத அனுபவம் அது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

லாசா... அனுமதி மறுக்கப்பட்ட நகரமாக அறியப்படுவது. தீட்சை பெற்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அங்கே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இங்கே உள்ளவை, ஒரு குழந்தை, நாசாவுக்குச் சென்று பார்த்துவிட்டு தானாகவே ஒரு விண்கலத்தைத் தயார்செய்து, நாசாவுக்கு முன்னதாக நிலவில் கால் வைப்பதற்கு ஒப்பானது.

ஏனென்றால், ஆன்மீக அதிர்வுகள் உயிர் பரவி நிரம்பி இருக்கும் இடம் அது. எனவே தீட்சை பெறாதவர்கள் நகரினுள் நுழைந்து, தவறாகப் புரிந்துகொண்டுவிடக் கூடாதே என்பதுதான் நோக்கம்!

லாசாவில் பொட்டலா அரண்மனையைப் பார்வையிட்ட பின்னர், சத்சங்கத்தில் லாசாவின் வரலாற்றுப் பின்னணியுடன் பேசத் தொடங்கினார் சத்குரு.

அநேகமாய் 1850களில் ஆன்மீகத்தின் ஆளுமைகளில் இங்கே பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. குருமார்களிடம் இருந்து தலைவர்களிடம் அதிகாரம் கை மாறியது. செல்வச்செழிப்பாய் வளர்ந்த இந்த இடம், ஆன்மீக மையம் என்ற தன்மையை இழந்து சாம்ராஜ்யமாக உருவெடுத்தது. 1959ல் நடந்த சீனப் போருக்கு இங்கே இருந்த செல்வச்செழிப்பும் ஒரு காரணம். ஆனால் இன்றைக்கு ஒரு மிகப் பெரிய வீழ்ச்சியை இங்கே பார்க்க முடிகிறது. 140 வருடங்களுக்கு முன்னால் இருந்த நிலைக்கும் இன்றைய நிலைக்கும் எவ்வளவு வித்தியாசம்?

இங்குள்ள ஆன்மீகக் கலாச்சாரம், பதஞ்சலி, அகத்தியர் போன்றவர்கள் நடைமுறைப்படுத்திய முறைகளைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எப்படியென்றால், விண்வெளி தொழில்நுட்பத்தில் சில விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். தற்செயலாக சில குழந்தைகள் அதைப் பார்த்துவிட்டு அவர்களே ஒரு விண்வெளி ஓடத்தைச் செய்தது போலத்தான் இங்கும் ஆன்மீக முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அங்கும் இங்குமாக எடுத்துச் சேர்த்தவற்றை வைத்தே, ஒரு ஆன்மீக முறையை உருவாக்கிவிட்டனர். ஆனாலும் அது வேலை செய்கிறது. தொடக்கத்தில் இருந்த குருமார்களின் பிரம்மாண்ட திறனால் பல பரிமாணங்களிலும் வேலை செய்தது என்பதால், இது முற்றிலும் தனித்துவமானது.

பொட்டலாவுக்குச் சென்றோமே... அங்கே ஓவியங்களையும், யந்திரங்களையும், சடங்குகளையும் பார்த்தீர்களா? தந்திராவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், அவர்களின் மந்திரங்களையும் யந்திரங்களையும் கவனித்துப் பார்த்தால், அவை இந்து தாந்திரீகத்திலிருந்து எடுக்கப்பட்ட முறைகள் என்பது புரியும்.

குறிப்பாக அவை யோக தாந்திரீக வழிகளில் மிகவும் வளர்ச்சியுற்ற, காஷ்மீர சைவ வழியில் வந்தவை. அங்கும் இங்குமாகச் சேகரித்து ஒரு பொம்மை போல இவற்றை உருவாக்கினர். ஆனாலும் அது வேலை செய்ததுதான் அழகே. ஆனால், அதுவே அதன் பலவீனமும்கூட.

பொருள் நிலை கடந்த பரிமாணம் அல்லது விஞ்ஞானம் அல்லது தொழில்நுட்பம் என்று நாம் கூறுவதெல்லாம் அடிப்படையாக ஆழமான புரிதலைத்தான். இந்த உயிர் எப்படி நிகழ்கிறது என்ற தன்மையை அறிவதுதான் அது. இதற்கு நீங்கள் முழு உலகைப் பற்றியும் படிக்கத் தேவையில்லை. இந்த உயிரே ஒரு பிரபஞ்சம்தான். இதை நீங்கள் முழுமையாக அறிந்தால், அனைத்தையும் அறிந்துகொள்வீர்கள். படைப்பு, படைப்பின் செயல் முறை என எல்லாவற்றையும்.

இது தவிர்த்து, படைப்பின் தன்மை, பிரபஞ்சத்தின் தன்மை பற்றி படித்துத் தெரிந்துகொள்ள எவ்வளவுதான் முயற்சித்தாலும் அது முடிவற்ற முயற்சிதான். அங்கும் இங்குமாகத் தெரிந்துகொண்ட சிலவற்றை நம்புவது முட்டாள்தனமானது என்பதை ஒருநாள் தெரிந்து கொள்வீர்கள். கடந்த 100 வருடங்களில் விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் கொண்டு மனிதன் அற்புதமான பல விஷயங்களைச் செய்திருக்கிறான். கடந்த பத்தாயிரம் வருடங்களில் செய்யாததை இந்த 100 வருடங்களில் செய்திருக்கிறான்.

பிரபஞ்சத்தில் பலவிதமான சக்திகளைக் கையாளும் ஆற்றலை மனிதன் பெற்றுவிட்டான். அந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. பொருள் சார்ந்த வசதிகள் பெருகிவிட்டன. ஆனாலும் உண்மையான அறிதல் என்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை. வெளிப்புற அறிவு சேர்ந்திருக்கிறது. ஆனால் தன்னையறிதல் நடக்கவில்லை. ஏனென்றால், விஞ்ஞானத்தைக் கொண்டு அது நடக்க வாய்ப்பு இல்லை.

எனவே, ஆன்மீகம், யோகா, தந்திரா இவையெல்லாம் வெவ்வேறு இடங்களை, வெவ்வேறு காலங்களைச் சார்ந்தே நிறம் பெறுகிறது. எனவே, திபெத்திய ஆன்மீகம் உறுதியாகக் கட்டமைக்கப் படாவிட்டாலும் குழந்தைத் தனமாய் இருந்தாலும் செயல்படுகிறது. அதுதான் இங்கே அதிசயத்தக்க ஒன்று. இந்தியாவில் 1000க்கும் மேற்பட்ட வழிமுறைகள் உள்ளன. ஆனால் அவையெல்லாம் மிக ஆழமான விஞ்ஞானப் புரிதலால் உருவாக்கப்பட்டவை.

ஆனால் இங்கே உள்ளவை, ஒரு குழந்தை, நாசாவுக்குச் சென்று பார்த்துவிட்டு தானாகவே ஒரு விண்கலத்தைத் தயார்செய்து, நாசாவுக்கு முன்னதாக நிலவில் கால் வைப்பதற்கு ஒப்பானது.

நமது இலக்கு லாசா இல்லை. பயணத்தை கைலாஷ் நோக்கித் தொடர்வோம்!


இதற்கு முன் பொட்டலா பேலஸிற்கு போயிருப்பவர்கள், லாசாவில் கால் பதித்திருப்பவர்கள் உங்கள் அனுபவத்தை எங்களுடன் கமென்டில் பகிர்ந்து கொள்ளலாமே!

பயணம் தொடரும்...