வேணு அரவிந்த் - தமிழ் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர். நடிகர்கள் என்றாலே, பரபரப்பான அட்டவணை, மனஅழுத்தம், தூக்கமின்மை போன்றவை சாதாரணம்தான். அதற்கு இவர் ஒன்றும் விதிவிலக்கல்ல. ஈஷா யோகா செய்து, பயிற்சிகள் தினசரி செய்து வருவதால் அவற்றிலிருந்து எப்படி விடுபட்டார் என்பதை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

என் வாழ்வில் இரண்டு முக்கியத் திருப்பங்களை உணர்ந்திருக்கிறேன். ஒன்று... நான் பணிபுரிந்த அலுவலகத்தின் மார்க்கெட்டிங் மேனேஜர், திரு. ஷெனால் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. வெளிச் சூழ்நிலையில் நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் எனக்கு உணர்த்தினார். இரண்டாவது இதயபூர்வமான திருப்பத்தை ஏற்படுத்தியவர் சத்குரு. உள் சூழ்நிலையில் நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது ஈஷா.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
சூழ்நிலை மோசமாக இருந்தால்கூட, அதில் சிக்கிக்கொள்ளாமல் வெளியே நின்று பாதிப்பில்லாமல் இருக்க முடிகிறது. ஒவ்வொரு சூழ்நிலையையும் நன்கு ஆராய்ந்து அணுகும் பக்குவத்தை ஈஷா எனக்கு அளித்திருக்கிறது.

நான் என் குழந்தைப்பருவத்தில் இருந்தே அதிக மன அழுத்தத்துக்கு ஆளாக்கப்பட்டிருந்தேன். ஒவ்வொன்றிலும் மூழ்கி விடுவதால், என்னையே மறந்துவிடுவேன். சரியான வேளைக்கு உண்ண மாட்டேன். என் ஒரே குறிக்கோள் பிறரிடம் நல்ல பெயர் எடுப்பதும், போட்டிகளில் வெற்றி பெறுவதுமாக மட்டுமே இருந்தது.

நான் மார்க்கெட்டிங் பணியில் ஈடுபட்டிருந்தேன். மார்க்கெட்டிங் துறையில் முன்னணியில் இருக்க முயற்சித்தபோது, என்னுள் மன அழுத்தம் மிக அதிகமாகிவிட்டது. நான் மேலாளர் ஆனபோது, எனக்குக் கீழ் இருந்த விற்பனைப் பிரதிநிதிகளிடமும் அதே தீவிரத்தை எதிர்பார்த்தேன். இவை அனைத்தும் நான் அறியாமலேயே என்னிடம் மிகவும் அழுத்தத்தை கொண்டு வந்து விட்டது. விளைவு, தூக்கமின்மை நோய் என்னைத் தாக்கியது. அப்போதுதான் எனக்கு ஈஷாவின் அறிமுகம் ஏற்பட்டது. நண்பர் ஒருவர், ‘ஈஷா யோகா மூலம் நான் நலம் பெற முடியும்’ என்றார். என்னுடைய ஆரோக்கியத்துக்காக ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால், சிறந்த ஆரோக்கியத்தை மட்டும் நான் பெறவில்லை. என் எண்ணங்களும் சிறப்பாக மாறின. வாழ்க்கையைப் பார்க்கும் விதமே சிறப்பாக மாறியது.

கடந்த 8 வருடங்களாக ஈஷா யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் செய்து வருகிறேன். அதனால், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணர முடிகிறது. இந்தப் பூமியில் எதற்காகப் பிறந்தோம் என்னும் கேள்வி அடிப்படையாகவே ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இந்த ஆன்மாவுடன் உடலும் ஒட்டிக் கொண்டு இருப்பதால்தான், இந்தக் கேள்வி ஒவ்வொருவரிடமும் எழுகிறது. நமக்கு அழிவில்லை, நாம் எப்போதுமே இருந்துகொண்டு இருக்கிறோம் என்பதை சத்குரு எனக்கு உணர வைத்தார். மேலும் உங்கள் உடல்தான் நீங்கள் என்கிற எண்ணத்தையும் உடைத்தார். நீங்கள் என்பது இந்த உடலைத் தாண்டிய ஒன்று என்பதை அவர் எனக்கு உணர்த்தினார்.

விஞ்ஞான அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஈஷா யோகா மிகவும் அற்புதமானது. அதன் மூலம் ஒருவர் தன் சக்தி நிலையை நன்கு உணர முடியும். ஒருவர் தனக்குள் பயணம் செய்ய, ஈஷா யோகா மிகச் சிறந்த வாகனமாகும். மேலும் நான், ‘பாவ ஸ்பந்தனா’ மற்றும் ‘ஹட யோகா’ வகுப்புகளில் பங்கு பெற்றிருக்கிறேன். ஈஷா யோகா மையத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் விதத்தைப் பார்த்துப் பல முறை பிரமிப்படைந்துள்ளேன். ஈஷாவால் நான் எவ்வாறெல்லாம் பயன் அடைந்துள்ளேன் என்று பார்த்தால், உடலளவில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். முன்பு இருமல், சளி, ஒவ்வாமை ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவேன். இப்போது ஈஷா யோகப் பயிற்சி செய்து வருவதால், அந்தப் பிரச்னை இல்லை. உணர்ச்சியளவில் தற்போது சமநிலையோடு இருக்கிறேன். சூழ்நிலை மோசமாக இருந்தால்கூட, அதில் சிக்கிக்கொள்ளாமல் வெளியே நின்று பாதிப்பில்லாமல் இருக்க முடிகிறது. ஒவ்வொரு சூழ்நிலையையும் நன்கு ஆராய்ந்து அணுகும் பக்குவத்தை ஈஷா எனக்கு அளித்திருக்கிறது.

ஈஷா யோகாவினால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. நான் உணர்ந்த அனைத்தையும் முழுமையாக வார்த்தைகளில் வெளிப்படுத்த இயலவில்லை. அந்த அனுபவங்களை விளக்க வார்த்தைகள் போதாது. ஈஷா என்னிடம் ஏற்படுத்திய மாற்றத்தை என்னைச் சுற்றியுள்ளவர்களும் நன்கு உணர்ந்தனர். இதனால் ஈர்க்கப்பட்ட அவர்களும் ஈஷா யோகா பற்றி முழுமையாக அறிய முயற்சி மேற்கொண்டனர். போய் பயனடைந்தார்கள். நான் சொல்வதின் உண்மையை, உள்சூழ்நிலை, வெளிசூழ்நிலைகளில் முற்றிலும் புதிய மாற்றத்தை ஈஷா யோகா சென்றால் நீங்களும் உணர்வீர்கள்!