மையத்தில் சத்குருவுடன் "இன்சைட்" நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்க, பிற பகுதிகளிலும் நடந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவருகிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவி நேத்ரம்

தமிழ்நாட்டில், பல பகுதிகளில், ஈஷா தியான அன்பர்களும், பிறரும், தேவியின் கண்களை தேவியின் அருள் வேண்டி, தங்கள் வசிப்பிடம் மற்றும் வியாபாரத் தலங்களில் நிறுவி வருகின்றனர். சமீபத்தில் நிறுவப்பட்டுள்ள இடங்கள்:

1. விசாலம் காபி(மேல்மாடி), கோரிப்பாளையம், மதுரை
2. ஈஷா யோகா மையம் மேல்மாடி, குமரய்யா கோவில், ராமேஸ்வரம் சாலை, ராமநாதபுரம்.
3. பஸ் நிலையம் அருகில், பரமக்குடி
4. அரண்மனை அருகில், சிவகங்கை.

சமூகப் பொறுப்புணர்வு உச்சி மாநாட்டில் ஈஷா திட்டங்கள்

ஈஷாவின் பசுமைக் கரங்கள், கிராமப் புத்துணர்வு இயக்கம், அரசுப் பள்ளி தத்தெடுப்பு திட்டம், ஈஷா வித்யா என ஈஷாவின் அனைத்து சமூகநலத் திட்டங்களும், புது தில்லியில், நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் நடந்த, "CSR Live Week" என்ற 2 நாள் சமூகப் பொறுப்புணர்வு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டனர். இதில் ஆதித்யா பிர்லா, ரிலையன்ஸ் அறக்கட்டளை, அப்பல்லோ மருத்துவமனைகள், டாடா ஸ்டீல்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் பங்குபெற்றன.

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பிற அரசு சாரா அமைப்பினருக்கும், ஈஷா திட்டங்களை விரிவாக எடுத்துரைக்க இந்த மாநாடு நமக்கு ஒர் அடித்தளமாக அமைந்தது.