குழந்தைகளுக்கான ஈஷா யோகா

கோடை விடுமுறையில் 7 - 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஈஷா யோகா வகுப்பு நடைபெற்றது. தமிழகம் மற்றும் இந்தியாவெங்கும் உள்ள அறுபதிற்கும் மேற்பட்ட ஈஷா மையங்களில் நடந்த இந்த வகுப்புகளில், பல நூறு குழந்தைகள் கலந்துகொண்டு யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டனர்.

4
3

மாட்டு மனையில் பெயர் சூட்டும் விழா

லிங்கபைரவிக்கு மக்கள் தானமாக வழங்கிய காளை, பசு மற்றும் கன்றுகளுக்கு பெயர் சூட்டும் விழா மையத்தில் உள்ள மாட்டு மனையில் மௌனமாக, சிறப்பாக நடைபெற்றது. பைரவன், நீலகண்டன், கருபச்சி, துளசி என்று அழகான பல பெயர்களை இவர்கள் பெற்றனர்.

2

பாரம்பரிய ஹடயோகா

மே 11ம் தேதி தொடங்கிய 21 நாள் பாரம்பரிய ஹடயோகா வகுப்பு, ஜுன் 1ம் தேதி நிறைவுபெற்றது. இதில் 321 பேர் கலந்து கொண்டனர். வகுப்பின் நிறைவாக சத்குருவுடனான சத்சங்கமும் நடைபெற்றது. இங்கிலாந்தில் இருந்து டெலிகான்பரன்ஸ் மூலம் சத்குரு இதில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.