ஈஷாவில் நடந்தவை…
இந்த வாரம் ஈஷாவில் நடந்த குழந்தைகளுக்கான கோடை சிறப்பு முகாம்... உள்ளே!
ArticleMay 5, 2013
குழந்தைகளுக்கான கோடை சிறப்பு முகாம்
ஈஷா அரசுப் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 30 முதல் மே 2 வரை கோயம்புத்தூரில் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. 7 பள்ளிகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் பங்குபெற்றனர். இந்த முகாமில், மாணவ மாணவிகளின் மாற்று அறிவுத்திறனை வெளிக்கொணரும் வகையில் கலை, கைவினைப் பொருட்கள், யோகா மற்றும் சதுரங்க விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.