ஈஷா ருசி

பாசிப்பருப்பு, சேமியா, ஜவ்வரிசி - இப்படியான பொருட்களில் பாயசம் செய்வதுதான் நம் வீடுகளில் வழக்கம். ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பாயசங்கள் கொஞ்சம் வித்யாசமானவைதான். இதை நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க, ரொம்ப சத்தானதும் கூட...

இளநீர் பாயசம்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான பொருட்கள்:

இளநீர் - அரை லிட்டர்
சேமியா - 150 கிராம்
முந்திரி - 25 கிராம்
பாதாம் - 25 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
வெள்ளரி விதை - 25 கிராம்
பூசணி விதை - 25 கிராம்
பனங்கற்கண்டு - 250 கிராம்

செய்முறை:

  • இளநீரை ஒரு பாத்திரத்தில் விட்டு அதில் கொதி வந்தவுடன் சேமியா சேர்க்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, பூசணி விதை எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
  • சேமியா வெந்தவுடன் அதில் இந்த பொடியையும் சேர்க்கவும் அதே சமயத்தில் பனங்கற்கண்டுடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • இதனையும் கொதிக்கின்ற பாயசத்தில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். இது பொதுவாக இல்லங்களில் செய்யப்படும் பால் பாயசத்தை விட பலமடங்கு சுவையானதாக இருக்கும். மிகச் சத்தான உணவும் கூட!

பலாப்பழ விதை பாயாசம்

தேவையான பொருட்கள் :

பலாப்பழ விதை - 250 கிராம்
தேங்காய் - 1 (துருவியது)
வெல்லம் - 200 கிராம்
பச்சரிசி மாவு - 4 ஸ்பூன்
ஏலக்காய் - 6
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை:

விதை தோல் எடுத்து கழுவி குக்கரில் வேக வைத்து சிறிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். தேங்காய் துருவலில் மூன்று பால் எடுக்க வேண்டும். (தனித்தனியாக எடுக்க வேண்டும்)

  • மிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி முதலில் எடுப்பது முதல் பால். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
  • பிறகு வடிகட்டி எடுக்கப்பட்ட தேங்காய் சக்கையை மீண்டும் மிக்ஸியில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்ற¤ அரைத்து வடிகட்டி எடுப்பது இரண்டாவது பால்.
  • மீண்டும் தேங்காய் சக்கையை எடுத்து மிக்ஸியில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி எடுப்பது மூன்றாவது பால்.
  • மூன்றாவதாக எடுக்கப்பட்ட பாலில் வேக வைக்கப்பட்ட பலாப்பழ கொட்டை மற்றும் வெல்லம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
  • இரண்டாவதாக எடுக்கப்பட்ட பாலில் அரிசி மாவை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் கரைத்து பிறகு வேக வைக்க வேண்டும்.
  • வெந்தவுடன் ஏலக்காய் பொடி தூவி, முதல் பாலையும், மூன்றாவது பாலையும் அதில் ஊற்றி இறக்கி வைக்க வேண்டும். சுவையாகவும், வயிற்றுப்புண்ணுக்கு மருந்தாகவும் அமையும்.