தமிழக மத்திய சிறைகளில் யோகா… கொரோனா காலத்தில் ஈஷாவின் அர்ப்பணிப்பு!
பல்வேறு சூழ்நிலைகளால் சிறைகளில் கைதிகளாக வாழ்ந்துவரும் மனிதர்களின் உடல் நலன் மற்றும் மனநலன் இந்த நோய்த் தொற்று காலத்தில் கவனிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. பல ஆண்டுகளாக சிறைகளுக்குச் சென்று யோகப் பயிற்சிகளை வழங்கி வரும் ஈஷா, இந்த கொரோனா காலத்திலும் ஆன்லைனில் அந்த பணியைத் தொடர்கிறது. இதுகுறித்து தொடர்ந்து படித்தறியலாம்.
கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த சூழலில் சிறையில் கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தும் விதமாக ஈஷா யோக மையம் ஆன்லைன் மூலமாக அவர்களுக்கு பிரத்யேக யோகா வகுப்புகளை நடத்தி வருகிறது.
தமிழக சிறைத் துறை உயர் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் இருக்கும் அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் ஜூலை 28ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. சத்குருவால் பயிற்றுவிக்கப்பட்ட ஈஷா யோகா ஆசிரியர்கள் இவ்வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.
இதில் யோக நமஸ்காரம், சிம்ம க்ரியா, ஈஷா க்ரியா போன்ற யோகப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. சிம்ம க்ரியா பயிற்சியானது நோய் எதிர்ப்பு சக்தியையும் நுரையீரல் திறனையும் மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஈஷா க்ரியா பயிற்சி உடலளவிலும், மனதளவிலும் அமைதியாகவும், சமநிலையாகவும் இருப்பதற்கும் துணை புரிகிறது. மேலும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் இப்பயிற்சிகள் தீர்வாக இருக்கும்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன் தனித்தனிக் குழுக்களாக இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் கைதிகள் பயன்பெற்று வருகின்றனர். அத்துடன் சிறை வார்டன்கள் மற்றும் பணியாளர்களும் இவ்வகுப்பில் பங்கேற்று பயன் பெறுகின்றனர்.
ஈஷா யோக மையமானது கடந்த 28 ஆண்டுகளாக தமிழக சிறைச்சாலைகளில் இலவச யோகா வகுப்புகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் எங்கிருந்தாலும் யாராக இருந்தாலும் - நீங்கள் ஒருபோதும் உங்களது உடல், மனம், மற்றும் உணர்ச்சிக்கு கைதியாக இருக்கக்கூடாது. யோகாவின் மூலம் உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளும் ஆற்றலை அறிந்திடுங்கள். -Sg#IshaYogaForPrisonershttps://t.co/D44A0tdZZ1
— Sadhguru (@SadhguruJV) August 11, 2020
கொரோனா தொற்று பரவிவரும் இவ்வேளையில், சிறைத்துறை உயர் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று தமிழகமெங்கும் மத்திய சிறைச்சாலைகளில் ஈஷா சார்பில் இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் ஜூலை 28ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள பத்திரிக்கை செய்திகள்.#IshaYogaForPrisoners pic.twitter.com/xPYjZnXvcD
— IshaFoundation Tamil (@IshaTamil) August 12, 2020
Subscribe