காவேரி நினைவேடுகள்: சத்குருவின் காவேரிப் பயணம்: நாள் 7
நேற்றோடு கர்நாடக நிகழச்சிகள் முடிவடைந்துள்ளது. இன்று புதுடில்லியில் நடைபெறும் ஐ.நா.வின் பாலைவனமாக்குதல் தடுக்கும் மாநாடு நடத்தும் கருத்தரங்கில் சத்குரு அவர்கள் கலந்து கொள்கிறார்கள். செப்டம்பர் 11 முதல் தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகள் துவங்கும். சத்குருவை வரவேற்க தமிழகம் பெருமளவில் தயாராகி வருகிறது. செப்டம்பர் 3, சத்குருவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட ஊர்களில் "காவேரி கூக்குரல்" விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்றும் நம் தன்னார்வத் தொண்டர்கள் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க பல ஊர்களில் முயற்சி எடுத்துள்ளனர்.
ஐ.நா.வின் பாலைவனமாகுதலை தடுக்கும் மாநாடு - சம்பந்தப்பட்டவர்களின் கருத்தரங்கம் (UNCCD - COP14) இன்று புதுடில்லியில் துவங்குகிறது. அதில் கலந்து கொள்வதற்கான அங்கீகாரம் சில நாட்களுக்கு முன் சத்குரு அவர்களுக்கும், ஈஷா அறக்கட்டளைக்கும் வழங்கப்பட்டது. அதை முன்னிட்டு அந்நிகழ்ச்சியில் பல சர்வதேச பிரமுகர்களுடன் சத்குரு அவர்களும் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி வரவிருக்கிறார்.
இந்த கருத்தரங்கத்திற்கான தலைப்பு, "பாலைவனமாதல், மண்வளம் குறைதல் மற்றும் வறட்சியை கட்டுப்படுத்துதல்"
காலை 9:20 மணியளவில் சத்குரு கருத்தரங்கம் நிகழும் இடத்திற்கு வருகிறார். அவரை அன்போடு வரவேற்பது, ஐ நா பாலைவனமாக்குதலை தடுக்கும் மாநாட்டின் துணை செயலாளர் திரு. பிரதீப் மோங்கா அவர்கள்
9:40 மணிக்கு பெரு மற்றும் நிகராகுவா நாடுகளின் பிரதிநிதிகள் சத்குருவைத் தேடிவந்து பேசுகின்றனர்
ஐ நா முன்னேற்ற சபை தலைவர், திரு.அகிம் ஸ்டைனர் அவர்களுடன் சத்குரு
10:15 மணிக்கு வந்திருப்பவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, சத்குருவை சந்திக்க மிக ஆவலாக காத்திருந்த மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் செனகால் நாட்டின் பிரபல பாடகர் பாபா மால் அவர்கள். இவர் ஐ நா வின் அமைதித் தூதராக பொறுப்பேற்க உள்ளார்.
சத்குருவை சந்திக்க காத்திருந்து… இதோ பார்த்தும்விட்டார்!
|
Subscribe
செயிண்ட் வின்சென்ட் அண்ட் தி கிரனடீன்ஸ் நாட்டின் மாண்புமிகு பிரதமர் திரு. ரால்ஃப் கன்சால்வெஸ் அவர்கள் மற்றும் மாண்புமிகு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வருகைக்காக காத்திருக்கும்போது அவர் உள்ளே நுழையும் காட்சி திரையில் காண்பிக்கப்படுகிறது.
10:30 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பம்
11:45 மணிக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சத்குருவையும், அவரது நதிகளை மீட்போம் பேரணியையும் பாராட்டி, இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்.
11:50 மணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தன் துவக்க உரையை வழங்குகிறார்.
12:20 மணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் உரை நிறைவடைகிறது. அந்த உரையின் ஓரு பாகத்தை இங்கு கேட்கலாம்.
India?? has hosted global gatherings through the CoP’s for all the three Conventions. This reflects our commitment to addressing all the three main concerns of the Rio Conventions :PM @narendramodi #UNCCDCOP14 pic.twitter.com/QZgvoXARvl
— PIB India (@PIB_India) September 9, 2019
12:25க்கு வெளியில் வரும்போது பத்திரிக்கையாளர்கள் சத்குருவை சூழ்ந்து கொள்கின்றனர்.
சத்குருவை வரவேற்க தயாராகி வரும் தமிழகம்…
நேற்று தமிழ்நாட்டின் பல இடங்களில் காவேரி கூக்குரலுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சத்குருவுடன் பொதுமக்கள் கூட்டம் நடைபெறும் இடங்களில் அந்நிகழ்ச்சிக்கு பொதுமக்களை அழைத்தும் ஆதரவு சேர்த்தனர்.
கன்னியாகுமரியில் பிள்ளையாரை தாமிரபரணி ஆற்றில் கரைக்கச் சென்ற இடத்திலும், கடலருகிலும் விழிப்புணர்வு முயற்சியில் பங்கெடுத்த நம் தன்னார்வத் தொண்டர்கள்…
திருச்சியில் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள சத்குரு கலந்துகொள்ளும் பொதுகூட்டத்திற்கு மக்களை தன்னார்வத் தொண்டர்கள் அழைக்கின்றனர்
காவேரி கூக்குரலுக்கான விழிப்புணர்வு முயற்சிகள்
|
அடுத்த நிகழ்ச்சி தருமபுரியில் 11ம் தேதி நிகழவுள்ளது. அதற்காக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இடம்.
இன்று ஒரு செய்தி
"தனிமை" என்பதும் இருக்கக்கூடுமோ? சத்குருவின் வீடியோவைக் காணுங்கள்…
மேலும் படிக்க...
விவசாயிகள் சேர்க்கை | தன்னார்வ செயல்கள் | பிரபலங்கள் | ||
---|---|---|---|---|
சத்குரு வீடியோ | கட்டுரைகள் | நாளிதழ் செய்திகள் | ||
சேனல் செய்திகள் | சிந்தனைக் கருவூலம் | விவசாயி வெற்றிக் கதைகள் |