இத்தாலி நாட்டில் உள்ள கிரேக்க மாநகரில், மலைகளின் நடுவே அமைந்திருக்கும் ‘டெல்ஃபி’யைத்தான் மண்ணுலகக் கருவூலம் என்னும் அடைமொழி கொண்டு ஐரோப்பியர்கள் கொண்டாடினார்கள். இந்தப் புனிதத் தலத்தை பல நூற்றாண்டுகளாக ஒரு நாகம் பாதுகாத்திருந்ததாகவும், அதை கிரேக்கக் கடவுள் ‘அப்போலோ’ வென்று அவ்விடத்தை தமது உரைவிடமாக்கிக் கொண்டார் என்பதும் புராணக் கதை. இன்று இவ்விடம் தொல்பொருள் ஆராய்ச்சித் தளமாக இருக்கிறது.