திருமதி. விஜயகுமாரி, நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் மஹாசமாதி அடைந்தார். ஒர் ஆன்மீக சாதகரின் உச்சபட்ச நோக்கமே மஹாசமாதி அடைவதுதான். நம் கலாச்சாரத்தில் இந்நிலையை எட்டிய பல யோகிகளின் வாழ்க்கையைப் பற்றி நாம் அறிவோம். முழு விழிப்புணர்வுடன் விஜி அம்மா, அவர்தம் உடலை நீத்த பிறகு, 12 மணி நேரம் கழித்து, 2000க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் விஜி அவர்களது உடல் தகனம் செய்யப்பட்டது.