ஈசனும் நானும்

ஈசனும் நானும் சேர்ந்தோம்
அக்கினிப் பிழம்பொன்று செய்தோம்

வெந்தணல் சூட்டின் சுகம்
என்றைக்கும் ஆனந்த யுகம்
ஒருவருக்கொருவர் தந்தோம்!

நாட்டினில் வாழ்வோர் எல்லாம்
சூட்டின் சுகத்தில் மெல்ல
ஆனந்தம் சுமந்து செல்ல - அந்த

நெருப்பிற்காலயம் செய்வோம்!
அருளை அனைவரும் உணர்ந்திடவே!

Love & Grace

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.