The லிங்கபைரவி யந்திரம் என்பது ஒரு தனித்துவமிக்கதும் சக்தி வாய்ந்ததுமான ஒரு சக்தி வடிவம். ஒருவரின் இல்லத்தில் உள்நிலையிலும் வெளி சூழலிலும் நல்வாழ்வை உருவாக்குவதற்காக சத்குரு அவர்களால் பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. லிங்கபைரவி யந்திரம் இரண்டு பகுதிகள் ஒன்றிணைந்தது: பாதரசத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரோட்டமுள்ள லிங்கம் மற்றும் ஒரு தாமிர பைரவி யந்திரம். இரண்டுமே திடப்படுத்தப்பட்ட பாதரசத்தால் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அவை வடிவமைக்கப்பட்ட கிரானைட் கல்லை அடித்தளமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு வழங்கப்படும் யந்திரங்கள் தாமிரத்தால் உருவாக்கப்படுகின்றன.

லிங்கபைரவி அவிக்ன யந்திரம் பிரத்யேகமாக பெரிய விஸ்தாரமான இடங்களுக்காக, குறிப்பாக தொழிற்கூடங்கள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களுக்காக வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.