loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

நம் நாட்டின் இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான தலைமுறையாய் செழுமைப்பட்டிருந்த நிலத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டாடும் தனித்துவமான ஒரு திருவிழா ஈஷா கிராமோத்சவம்.

கிராமோத்சவம் என்பதன் உண்மையான அர்த்தம் "கிராமங்களின் கொண்டாட்டம்" என்பதாகும். நாட்டின் 75 சதவிகித மக்கள் தொகை கிராமத்தில் தான் உள்ளது. இம்மக்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் வளமை இம் மேம்பட்டிற்றிக்காக கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு ஈஷாவின் திட்டங்களின் முக்கிய நோக்கம் இதுதான்.

நமது செயல் முறை

ARR_Gramotsavam_Problem

பிரச்சனை

கிராமப்புறங்களில் 60 சதவிகித மக்கள் வேலை செய்யக் கூடிய வயது வரம்பில் உள்ளனர். துரதிஷ்டவசமாக லாபமற்ற விவசாயத்தின் தாக்குதலாலும் அனைவரையும் உள்ளடக்காத வளர்ச்சி பாதைகளினாலும் கிராம மக்களின் உள்ளம் உற்சாகமின்றியுள்ளது. மோசமான ஏழ்மை சூழலில் மூழ்கிப்போகும் கிராம இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கும் புகையிலைக்கும் அடிமையாகிப் போகின்றனர்.

ARR_Gramotsavam_Solution

நமது தீர்வுகள்

அவர்களின் உள்ளத்தில் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி கிராமப்புற சமூகங்களில் கொண்டாட்டத்தின் தன்மையை கொண்டு வருவதே எங்கள் நோக்கம். கிராம மக்களை விளையாட்டு ,யோகா மற்றும் "ஈஷா கிராமோத்சவம்" போன்ற திருவிழாக்களில் ஈடுபடுத்துவதன் மூலம் இந்த நோக்கம் வெற்றி பெற்றுள்ளது.

ஈஷாவின் கிராம புத்துணர்வு இயக்கத்தின் மூலம் நடத்தப்படும் கிராமோத்சவம் தமிழக கிராமங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு உற்சாகமான திருவிழா.

ஒரு மாத காலம் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழா இறுதியில் 2 நாள் மாபெரும் நிகழ்வாக கொண்டாடப்பட்டு நிறைவு பெறும். கிராமோத்சவத்தின் முக்கியமான அம்சம் "ஈஷா புத்துணர்வு கோப்பை"-க்காக நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிகள் - தமிழகம் எங்குமிருந்து வந்து ஆயிரக்கணக்கான பேர்கள் பங்கேற்கும் ஆண்கள் கைப்பந்து மற்றும் பெண்கள் எறிபந்து, அத்துடன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி இறுதி போட்டிகள்.

இந்த நிகழ்வில் கிராமிய உணவு திருவிழா, கிராமிய கலாச்சார திருவிழா மற்றும் சௌண்ட்ஸ் ஆப் ஈஷா இசை குழுவினரின் ஆர்ப்பரிக்கும் இசை என பல நிகழ்ச்சிகள் நாட்டின் கலாச்சாரத்தை பறைசாற்றி களைகட்டும் - இவை தேவையற்ற நகரமயமாக்கலில் நாம் தொலைத்து விட்ட ஒன்று. தமிழக கிராமிய சாராம்சத்தை பறைசாற்றும் விதமாக கிராமிய விளையாட்டுகள், இயல், இசை, நாடகம் மற்றும் பாரம்பரிய உணவு என்று பல விதமாக படைக்கப்படும் திருவிழா இது. இங்கு நடத்தப்படும் மாநில அளவிலான கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கிராமிய வாழ்க்கையில் விளையாட்டின் பங்கை வெளிக்காட்டும் வண்ணம் அமைந்துள்ளது.

2015-ஆம் ஆண்டு ஈஷா கிராமோத்சவத்தை தலைமை தாங்கிய சச்சின் டெண்டுல்கர் கிராமங்களுக்கு விளையாட்டை கொண்டு செல்லும் ஈஷாவின் முயற்சியை பாராட்டினார். 2004-ஆம் ஆண்டில் இருந்து 12 லட்சத்துக்கும் மேலான மக்கள் ஈஷா கிராமோத்சவத்தின் மூலம் புத்துணர்ச்சி பெற்றுள்ளனர்.

2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்து வந்த கிராமோத்சவ விளையாட்டு அணிகள் பங்கு கொண்டனர். 2020-ஆம் ஆண்டு கிராமோத்சவத்தில் தமிழ்நாடு புதுச்சேரி கர்நாடகா தெலுங்கானா ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்து வரும் அணிகள் பங்கேற்பார்கள்.

Success stories

1 கதைகள் ஈஷா கிராமோத்சவம்

நாகமணியின் கதை

மூன்று தலைமுறை சாம்பியன்கள்

இப்போது 75 வயதாகும் நாகம்மை கடந்த 12 வருடங்களாக எறிபந்து விளையாடி வருகிறார். எறிபந்தின் மூலம் தான் தன் வாழ்க்கையே தொடங்கியதாக அவர் கூறுகிறார்.
முழு கதையையும் படியுங்கள்

நீங்கள் என்ன செய்யலாம்

donate

நன்கொடை அளிக்க

கிராமப்புற சமூகங்கள் மேம்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்

 
நன்கொடை அளிக்க
ARR_Volunteer

தன்னார்வ தொண்டு புரிய

இந்திய கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வை மேம்படுத்த, அந்த மாற்றத்தை உருவாக்க எங்களோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள்!
பதிவு செய்ய
start a campaign

ஒரு பிரச்சாரத்தை தொடங்க

கிராமப்புற மக்கள் வாழ்வு மேம்பட நிதி திரட்டும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள அல்லது புதிதாக ஒரு பிரச்சாரத்தை துவக்க வாருங்கள்.
இங்கே தொடங்கவும்
செய்தியை பரப்புங்கள்

எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பங்கு கொண்டு கிராமப்புற செயற்பாடுகள் மற்றும் முயற்சிகள் குறித்த முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

தொடர்பில் இருங்கள்
Get the latest updates on projects and happenings at Action Rural Rejuvenation and on the rest of Isha's social work — delivered to your inbox.
I agree to the terms & conditions
நான் உங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்.