நினைத்தது நிறைவேற வேண்டுமானால், முதலில் உங்களுக்கு எது வேண்டும் என்று மனதில் தெளிவு வேண்டும்.... உறுதி வேண்டும்! உங்களில் பெரும்பாலானவர்களுக்கு எது வேண்டும் என்று கேட்கத் தெரியாது. எது வேண்டாம் என்று சொல்லித்தான் பழக்கம்.

உங்களில் பெரும்பாலானவர்களுக்கு எது வேண்டும் என்று கேட்கத் தெரியாது. எது வேண்டாம் என்று சொல்லித்தான் பழக்கம்.

'நான் தோல்வி அடையக்கூடாது, என் தொழிலில் நஷ்டம் வரக்கூடாது. இதை நான் இழந்துவிடக்கூடாது' என்று 'வேண்டாம்'களையும், 'கூடாது'களையும் தான் அதிகம் நினைக்கிறீர்கள்.

நீங்கள் எதற்கு ஆசைப்பட்டீர்களோ, முதலில் அதை மனதளவில் கற்பனையில் உருவாக்குங்கள். அப்போதுதான் அது நிஜத்திலும் உருவெடுக்கும்!

ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால், மனதில் அதை எழுப்பி, காகிதத்தில் வரைந்து, திருத்தி அமைத்துத்தானே நிஜத்தில் கட்டுகிறீர்கள்?

அஸ்திவாரம் போடும் நிலையிலேயே மனதில் உறுதியில்லாமல், 'இது என்னால் முடியுமா?' என்று சந்தேகப்பட ஆரம்பித்தால், உங்கள் வீடு கற்பனையில்கூட எழும்பாது.

போர்க்களம் நோக்கிப் படையை நடத்திக் கொண்டிருந்தான் ஒரு தளபதி. பாதி வழியில் அவனை ஓர் ஒற்றன் எதிர்கொண்டான்.

"தளபதியாரே, நம்மிடம் ஆயிரம் வீரர்கள்தான் இருக்கிறார்கள். எதிரியிடமோ பத்தாயிரம் வீரர்கள் இருக்கிறார்கள். நாம் பேசாமல் சரணடைந்துவிடலாம்" என்றான்.

தகவல் அறிந்ததும் ஆயிரம் வீரர்களும் தைரியமிழந்தார்கள். அவர்கள் எல்லோரையும் அம்மன் ஆலயத்துக்கு வரச் சொன்னான் தளபதி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
'கடவுளே, எனக்கு இது வேண்டும்' என்று தீவிரமாக வேண்டிக்கொண்ட சிலருக்கு, ஆசைப்பட்டது கிடைத்ததைக் கவனித்திருப்பீர்கள். கடவுளா வந்து அதை நடத்திக் கொடுத்தார்?

"வலுவான எதிரியை நம்மால் வெல்ல முடியுமா என்பதைத் தெய்வத்திடமே கேட்டு விடுவோம். சந்நிதியில் இந்த நாணயத்தைச் சுண்டுகிறேன். தலை விழுந்தால் போருக்குப் போக, அம்மன் உத்தரவு தந்ததாக ஏற்போம். பூ விழுந்தால் இப்படியே திரும்பிவிடுவோம்" என்று நாணயத்தைச் சுண்டினான்.

தலை விழுந்தது. வீரர்கள் அனைவரும் உற்சாகமானார்கள். போருக்குப் போனார்கள். அவர்களைப் போல் பத்து மடங்கு படைபலம் கொண்ட எதிரியை வீழ்த்திவிட்டார்கள். வெற்றியுடன் நாடு திரும்புகையில் அம்மனுக்கு நன்றி சொல்ல, எல்லோரும் அதே கோயிலில் கூடினார்கள்.

உங்கள் மனதில் தேவையானதற்கு ஆசைப்படும் எண்ணம் ஒன்று எழுந்தால், நம்பிக்கையின்றி அச்சப்படும் எண்ணங்கள் ஆயிரம் தோன்றுகின்றன.

தளபதி அப்போதுதான் தன்னிடமிருந்த நாணத்தை எடுத்துக் காட்டினான். அதில் இரண்டு பக்கமும் தலைதான் அச்சாகியிருந்தது.

தெய்வமே உத்தரவு தந்துவிட்டதாக எண்ணிய வீரர்கள், எப்படியும் வெற்றி பெறுவோம் என்று முழுமையாக நம்பினார்கள். அவர்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் எழவில்லை. அதனால் வெற்றியே பெற்றார்கள்.

அந்த விதத்தில் கடவுள் என்பது எண்ணங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ள பயன்படும் ஒரு கருவி அவ்வளவுதான்.

மற்றபடி, எதற்கெடுத்தாலும் கோயிலுக்குப் போய் வேண்டிக் கொண்டால் காரியங்கள் நடந்துவிடுமா?

கடவுள்மீது இம்மியளவும் சந்தேகமில்லாத பூரண நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? கள்ளம் கபடமற்ற அந்த குணம் இருந்தால்தான், எதிர்மறையான எண்ணங்கள் தலையெடுக்காது. ஆசைப்பட்டது கிடைக்கும்!

ஆனால், சந்நிதியில் ஒரு கண்ணும், வாசலில் விட்டு வந்த செருப்பில் ஒரு கண்ணுமாகத்தான் உங்களால் கடவுளுடன் உறவு கொண்டாட முடியும் என்றால், கடவுளை நம்புவதாக உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள், அவ்வளவுதான்! அந்தப் பொய் விசுவாசம் உங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள உதவாது.

கடவுளிடம் வேண்டிக் கொண்ட பிறகும் அது நடக்குமோ நடக்காதோ என்ற பயமும், மனதின் போராட்டமும் தொடர்ந்தால், எதிர்மறையான எண்ணங்கள் எப்படி விலகும்? ஆசைப்பட்டது எப்படி கிடைக்கும்?

சங்கரன்பிள்ளை ஒருமுறை வெகுதூரம் நடந்து, தற்செயலாக சொர்க்கத்துக்குள் நுழைந்துவிட்டார். அவருக்கு அகோரப்பசி. களைப்பாக இருந்ததால் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார். அது கேட்கும் வரங்களை எல்லாம் அள்ளித்தரும் கற்பக விருட்சம். அது தெரியாமலேயே, 'இப்போது மட்டும் வயிறார உணவு கிடைத்தால் எப்படி இருக்கும்?" என்று நினைத்தார்.

அடுத்த கணம் ஆசைப்பட்ட உணவு வகைகளெல்லாம் பொன்தட்டில் அவர் முன் வந்தன. விரும்பிய பழச்சாறுகள் எல்லாம் தங்கக் கோப்பைகளில் கிடைத்தன.

ஆசைப்பட்டதைக் கொடுக்கும் கற்பக விருட்சங்களைத் தேடி நீங்கள் காட்டுக்குள் போகத் தேவையில்லை. உங்கள் எண்ணங்கள் தீவிரமாக இருந்தால், உங்கள் மனம் உறுதியாக இருந்தால், அதுவே வரமளிக்கும் விருட்சமாகச் செயல்படும்.

வயிறு நிரம்பியவுடன் தூக்கம் வந்தது. 'வசதியான கட்டில் இருந்தால்?' என்று நினைத்தார். உடனே சொகுசான மெத்தையும், கட்டிலும் அவர் முன் தோன்றின.

அவருக்கு இப்போது அச்சம் வந்துவிட்டது. 'நினைத்தவுடன் எப்படி, எல்லாம் கிடைக்கிறது? இதென்ன பிசாசுகளின் இருப்பிடமா?" என்று நினைத்தார். அடுத்த கணமே அவரைப் பிசாசுகள் சூழ்ந்தன.

'ஐயையோ, இந்தப் பிசாசுகள் என்னைக் கொன்றுவிட்டால்...?' என்று சங்கரன்பிள்ளை நினைத்ததுதான் தாமதம், பிசாசுகள் அவரைக் கிழித்துத் தின்றன.

சங்கரன்பிள்ளைக்கு நேர்ந்த கதியைக் கவனித்தீர்களா? உங்கள் எண்ணங்கள் எதிர்மறையாக இருந்தால், இதுதான் விளைவு.

உங்கள் மனதில் தேவையானதற்கு ஆசைப்படும் எண்ணம் ஒன்று எழுந்தால், நம்பிக்கையின்றி அச்சப்படும் எண்ணங்கள் ஆயிரம் தோன்றுகின்றன.

உங்கள் ஆசை எண்ணத்தின் சக்தியை நீங்களே பலவீனப்படுத்தும் அபத்தத்தை முதலில் விட்டொழியுங்கள்.

ஆசைப்பட்டதைக் கொடுக்கும் கற்பக விருட்சங்களைத் தேடி நீங்கள் காட்டுக்குள் போகத் தேவையில்லை. உங்கள் எண்ணங்கள் தீவிரமாக இருந்தால், உங்கள் மனம் உறுதியாக இருந்தால், அதுவே வரமளிக்கும் விருட்சமாகச் செயல்படும். எண்ணங்களால் ஏற்படும் அதிர்வுகளுக்கு அந்த சக்தி உண்டு என்று விஞ்ஞானத்திலும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.