‘Eternal Echoes’ எனும் புத்தகம் சத்குருவால் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு! அன்பு, பக்தி, ஏக்கம், போராட்டம், தேடுதல் மற்றும் பேரானந்தம் என பல்வேறு தன்மைகளை கவிநயத்துடன் வெளிப்படுத்தும் சத்குருவின் கவிதைகள், குருவின் பல்வேறு அம்சங்களை ஆழம் மிக்க வார்த்தைகளில் அழகாய் நம் கண்முன்னே காட்சிப்படுத்தி காட்டுகின்றன. கவிதையின் உணர்வினை பிரதிபலிக்கும் வகையில் அதற்கு உகந்த புகைப்படங்களை சத்குருவே கவனமாக தேர்ந்தெடுத்துள்ளது இதில் குறிப்பிடத்தக்கது.