ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்
தமிழ் இன வரலாற்றில் நொய்யல் நதி மிகப் புனிதமாக வணங்கப்படுகிறது. முன்காலத்தில் இது “காஞ்சி நாடி” என்று வழங்கப்பட்டது. பின்னரே இது “நோயற்ற” என்று பொருள்படும் நொய்யல் ஆனது.
கோவையின் வெகு அருகில் இருக்கும் பேரூரிலே, இந்த ஆற்றங்கரை ஓரமாக பல கோவில்களும், கலைக்கூடங்களும் உருவாக்கப்பட்டது. பேரூரில் இன்றும் இருக்கும் பட்டீஸ்வரர் கோவிலில், நாட்டியாஞ்சலி எனும் வருடாந்திர நாட்டியத் திருவிழா நடைபெறுகிறது.
நொய்யல் நதியின் பிறப்பிடமான வெள்ளியங்கிரி மலையை, தக்ஷிண கைலாயம் (அ) தென்கைலாயம் என்று சொல்வர். யோக மரபின் படி, ஆதியோகியாம் சிவன் இம்மலைகளில் சிறிதுகாலம் வசித்ததாக