சமீபத்திய பேரழிவுகள்
பிரம்மபுத்திராவின் கரைகளிலுள்ள வனங்களை அழித்ததால் வண்டல்கள் தேங்குவதின் அளவு அதிகரித்திருக்கிறது. திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. மேல்பரப்பில் உள்ள சத்துக்கள் எல்லாம் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. இப்பெரும் வெள்ளங்களினால் பயிர்கள், உயிரினங்கள் மற்றும் பல வாழ்வாதாரங்களும் அதிக அளவில் சேதமாகியுள்ளது.
ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்
பிரம்மபுத்திராவின் கரைகளில் பல தொன்மை வாய்ந்த கோவில்களும், புனிதமான இடங்களும் அமைந்துள்ளன. சக்திபீடங்களில் ஒன்றான காமாக்யா கோவில் இதன் கரையில்தான் அமைந்துள்ளது.
குரு தேக்பஹதூர் ஸாஹிப் குருத்வாரா என்று கூறப்படும் சீக்கியர்களின் கோயில், அஸ்ஸாமில் உள்ள துப்ரி ஆற்றின் கரைகளிலே அமைந்துள்ளது. 1505களில் குருநானக் இந்த இடத்திற்கு வருகை தந்தார். இந்த குருத்வாரா அவர் வந்துசென்ற 160 ஆண்டுகளுக்குப் பிறகு குருதேக் பஹதூரால் கட்டப்பட்ட்து. மற்றபல இந்திய ஆறுகள் பெண் அம்சமாக போற்றப்பட்டாலும், பிரம்மபுத்திரா மட்டும் ஆண்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது.