நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன
இந்திய நதிகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையினாலும் அதன் வளர்ச்சி தேவைகளினாலும் நம்முடைய வற்றாத ஜீவநதிகள் எல்லாம் இப்போது பருவகால நதிகளாய் மாறிவிட்டன. பல சிறிய நதிகள் மறைந்தேவிட்டன. பருவமழை காலங்களில் நதிகள் கட்டுக்கடங்காமல் ஓடி மழைக்காலம் முடியும்போது மறைந்து போகின்றன. இதனால், வெள்ளம் மற்றும் வறட்சி அடிக்கடி நிகழ்கிறது.
நதிகளை மீட்போம், பாரதம் காப்போம் நமது நதிகளுக்கு புத்துயிர் ஊட்ட ஒரு தேசம் தழுவிய விழிப்புணர்வு இயக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. சத்குருவின் சிந்தனையில் உருவான இந்த இயக்கம், நாடு முழுவதிலுமிருந்து பலரது ஆதரவை பெற்றுள்ளது. இந்த இயக்கம் வெற்றிபெற, இளைஞர்கள் இதை முன்னெடுத்து நடத்தவேண்டும். ஒரு செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்ல, கலை ஒரு சக்திவாய்ந்த ஊடகமாய் விளங்குகிறது. ஆகையால், உங்கள் படைப்பாற்றலை பெருக்கெடுத்து ஒடவிடுங்கள் நம் நாட்டு மக்களுக்கு நமது ஆறுகள் படும் அல்லல்களை தெரியப்படுத்துவோம்!