லிங்கபைரவி தேவியை ஒருமுறை தரிசித்துவிட்டு சென்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் வாழ்வில் வெற்றியையும் நல்வாழ்வையும் ருசித்துவிட்டு, எப்போதும் தேவியைத் தங்களுடனேயே வைத்துக் கொள்வதற்கு ஏங்குகின்றனர். அனைவரும் தேவியை யந்திரமாய் கொண்டு செல்லலாம் என சத்குரு வழங்கியதே தேவி யந்திரங்கள். சக்திவாய்ந்த தேவி யந்திரங்கள் பற்றி...

"மண்ணை உணவாக மாற்றினால், அது விவசாயம். உணவை எலும்பாகவும் சதையாகவும் மாற்றினால் அது ஜீரணம். சதையை மண்ணாக மாற்றினால், நாம் அதை தகனம் என்கிறோம். நீங்கள் ஒரு சதையையோ அல்லது ஒரு கல்லையோ அல்லது ஒன்றுமற்ற வெளியையோ தெய்வீக சாத்தியமாக மாற்ற முடியுமென்றால் அதுதான் பிரதிஷ்டை"
- சத்குரு

பிரதிஷ்டை என்பது, ஒரு பொருளை சக்தியூட்டி அதன் உச்சபட்ச நிலையிலும் சூட்சுமமாகவும் அதிர்வுறச் செய்யும் ஒர் அறிவியல். இந்தச் செயல்முறையின் மூலம் ஒரு கல்லையோ, ஒன்றுமற்ற வெளியையோ அல்லது ஒருவரின் உடலையோ கூட தெய்வீக சாத்தியத்திற்கு பரிணமிக்கச் செய்ய முடியும். பலவிதமான யந்திரங்களைப் பயன்படுத்தி இடங்களைப் பிரதிஷ்டை செய்ய முடியும். பாரம்பரியமாக, யந்திரங்கள் ஒரு குறிப்பிட்ட பலனைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

யந்திரம் என்பது...

"நமக்கு நடக்கக் கால்கள் உள்ளன, ஆனால் நாம் சைக்கிளை உருவாக்கினோம். நாம் கால்களின் செயல்திறனில் திருப்தி அடையவில்லை. எனவே நமக்கு சைக்கிள் தேவைப்பட்டது. சைக்கிள் சவாரி நமக்கு சொர்க்கத்தில் பறப்பது போன்ற உணர்வைத் தந்தது. ஆனால் அதன்பின் சைக்கிளின் வேகம் போதவில்லை. அதைவிட வேகமாகப் போக விரும்பினோம். எனவே, மோட்டார் சைக்கிள், கார் போன்ற பற்பல யந்திரங்களை உருவாக்கினோம். அப்போதும் போதவில்லை, அதன்பின் ஆகாய விமானம், ஜெட் விமானம் என உருவாக்கினோம். வேகம், அதைவிட வேகம் என ஆனது. இதுதான் யந்திரம் என்பது.

உங்கள் உத்வேகமும் செயல்பாடுகளும் ஒரு குறிப்பிட்ட எல்லைத் தாண்டி பிரகாசிக்க வேண்டுமென்றால் நீஙகள் யந்திரங்களை நாட வேண்டியுள்ளது. சில மாறுபட்ட செயல்பாடுகளைச் செய்யும்போது, குறிப்பிட்ட யந்திரங்களின் உதவி இருந்தால் என்னால் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட முடியும்."

- சத்குரு

லிங்கபைரவி யந்திரங்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

லிங்கபைரவி யந்திரங்கள் தேவியின் அருளை நேரடியாகப் பெறுவதற்கு வழிசெய்கின்றன. தேவி யந்திரத்துடன் நீங்கள் உங்கள் கைகளால் நேரடியாக தொடும்போது தேவியின் சக்தி அதிர்வுகள் உங்களின் சக்தி அமைப்பை மாற்றி உங்கள் வாழ்வை உயர்ந்த பரிணாமத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன.

லிங்கபைரவி யந்திரங்களின் பலவித பலன்கள்

தேவியின் அருள் நிழலில் வாழும்போது, ஒருவர் தனது முழுத் திறனோடு மிளிர உறுதுணை புரிகிறது. லிங்கபைரவி யந்திரங்கள், ஒருவர் பொருள் நிலையிலும் ஆன்மீக நிலையிலும் முழுமையாய் மலர துணை நிற்கிறது. அவளின் இருப்பில் இருந்து ஆன்மீக சாதனைகளைச் செய்யும்போது அதிகப்படியான பலன்களைக் காணமுடிகிறது.
நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பைரவி யந்திரங்கள் சக்தியைத் தக்க வைத்துக் கொள்கின்றன. எனவே, நீங்கள் மட்டுமல்லாது உங்கள் வருங்கால சந்ததியினரும் தேவியின் சக்தியை உணர்ந்து அவளின் அருள் நிழலில் வாழ்ந்திட முடியும்.

சிலரின் அனுபவங்கள்!

"சத்குரு ஆசிர்வதித்து லிங்கபைரவி அவிக்ன யந்திரத்தை வழங்கிய நாளிலிருந்து, நம்ப இயலாத பல நிகழ்வுகள் என் வாழ்வில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. நான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். நோயாளிகள் எங்கள் மருத்துவமனைக்கு வந்த உடனேயே அமைதியையும் சாந்தமான மனநிலையையும் அடைவதைக் காண்கிறேன். ஒவ்வொருவரும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் வாழ வேண்டுமென சத்குரு கூறுவதன் முக்கியத்துவத்தை அப்போதுதான் நான் உணரத் துவங்கினேன்."
- வில்புராய் ரத்தோட் (M.S), எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர், மும்பை

"லிங்கபைரவி அவிக்ன யந்திரம் என்னுடைய வாழ்வில் நான் கண்ட மிக அற்புதமான ஒன்று. அது என் காரண அறிவிற்கு உட்படாத நிலையில் வேலை செய்கிறது. என் வாழ்வில் தேவி வந்த நாளிலிருந்து ஆரோக்கியம், பொருள் நலம், மனக்குவிப்பு என பல்வேறு பலன்களை வழங்கி வருகிறாள். யந்திர வைபவத்திற்குப் பின் என் வாழ்வில் பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. யந்திரத்தை அறியாமல் அதன் சக்தி எல்லைக்குள் வருபவர்களுக்கும் கூட அவள் அருள்பாலிக்கிறாள். எனது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வன்முறையாக நடந்துகொள்ளக் கூடிய இளைஞர்கள் அவிக்ன யந்திர வருகைக்குப் பின், சாந்தமாகவும் அமைதியாகவும் மாறிவிட்டனர்." - ஆதித்யா தேசாய்

ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் யந்திரம் வழங்கும் வைபவத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவி யந்திரங்கள் சத்குரு கைகளால் வழங்கப்படுகின்றன.

தேவி யந்திரங்கள் குறித்த தகவல்களுக்கு:
+91 94425 04720
yantra @ lingabhairavi.org

ஸ்ரீ யோகினி டிரஸ்ட்
லிங்கபைரவி, பூண்டி, செம்மேடு (அஞ்சல்)
கோயம்புத்தூர் - 641 114