தெய்வ கீதத்தின் இசையாய் நீயே ஆவாய்

வெற்று மூங்கிலில் நுழையும் காற்று
அற்புத இசையாய் அகிலம் மயக்கும்
சொந்தத் திரவம் நிரம்பிய மூங்கிலோ
எந்த நேரமும் ஊமையாய் இருக்கும்
படைப்பு முழுமையும் பரவசப் பாடல்
வெடித்துக் கிளம்பும் வசந்தவேளையில்
இனிய கீதம் உனக்கும் கேட்டிட
உன்னைக் கொட்டி வெறுமையாக்கிடு
குருவின் விருப்பத்தில் முழுவதும் கரைகையில்
தெய்வ கீதத்தின் இனிமையாய் இசையாய்
நிறையும் மணமாய் நீயே ஆவாய்

 

Love & Grace

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.