அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் - சில எளிய குறிப்புகள் - பகுதி 2

இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்துக்கும், தான் எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரியும், மனிதனைத் தவிர. தண்ணீரை எப்படிக் குடிக்க வேண்டும் என்பது பற்றியும், ஆரோக்கியமான திரவ உணவுகள் குறித்தும் சத்குரு வழங்கும் குறிப்புகளை இந்த வாரம் காண்போம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திரவங்கள்

உடலில் கிட்டத்தட்ட 70% நீர்தான் உள்ளது. உடலுக்குள் இருக்கும் நீரின் தன்மைக்கும், அந்த மனிதருடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. நம் நாட்டில், நம் முன்னோர்கள், எப்போதுமே நீரின் தூய்மையையும், மேம்பட்ட சக்தியையும் பராமரிப்பதற்காக, குடிக்கும் நீரின் மேல் அதிக கவனம் செலுத்துவதற்கு வலியுறுத்தியிருக்கிறார்கள்.

முந்தைய தினம் இரவு முழுவதும் ஒரு செம்புப் பாத்திரத்தில் நீரை வைத்திருந்தால், அது அந்நீர் மிகவும் தூய்மையடைய வழி வகுக்கிறது.

முந்தைய தினம் இரவு முழுவதும் ஒரு செம்புப் பாத்திரத்தில் நீரை வைத்திருந்தால், அது அந்நீர் மிகவும் தூய்மையடைய வழி வகுக்கிறது. இது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும், சக்தி நிலைக்கும் அந்த நீர் நன்மை பயக்கிறது.

சுத்தமான தண்ணீர்...

  • நீங்கள் குடிக்கும் நீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரை 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பிறகு அதை ஆற விடுவதுதான் பாதுகாப்பானது.
  • அது வெதுவெதுப்பானவுடன், ஒரு மண் பானையில் ஊற்றி வையுங்கள்.
  • தண்ணீரில் சிறிது சீரகம் போட்டு கொதிக்க வைக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு துளசியைப் போட்டு வைக்கலாம்.
  • மண்பானையில் பூச்சிகள், தூசி மற்றும் இதர குப்பைகள் விழாமலிருக்க, எப்போதும் பானையை மூடி வைக்கவும்.

உங்களுக்கு தாகமெடுக்கும்போது தாகம் தணிகின்ற அளவு நீரை குடிப்பதுடன் மேலும் சிறிது கூடுதலாக நீரைக் குடிக்க வேண்டும். அந்த அதிகப்படியான நீர் உங்கள் உடல் உறுப்புகள் சுத்தமாவதற்கு உதவும். உங்கள் உடலில் போதுமான நீர் இருக்குமளவு பார்த்துக் கொள்ள வேண்டும். உடலில் தண்ணீர் வற்றிவிட்டாலோ அதிகமானாலோ, மூளையில் சோடியத்தின் அளவு மாறுபட்டு குறைந்து, மூளை வீக்கம் ஏற்பட்டுவிடும்.

கோடை காலங்களில்...

  • கோடை காலத்தில், கொதிக்க வைத்த நீருடன், தாது உப்புக்கள் நிறைந்துள்ள இளநீரைப் பருகுங்கள்.
  • பகல் நேரத்தில் பழச்சாறுகளை அருந்தலாம்.
  • பூசணி ஜூஸ் குளிர்ச்சியளித்து, அமைதிபடுத்தி, சக்தியூட்டும் தன்மை வாய்ந்தது.
  • கோடை காலங்களில் அருந்துவதற்கு உகந்தது.
  • குளிர்காலத்திலும் இதை அருந்தலாம் என்றாலும், அதில் சிறிது தேனோ அல்லது கருமிளகுத் தூளோ கலந்து அருந்தினால், அதன் குளிர்ச்சித் தன்மையை குறைக்க முடியும்.

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் தொடரின் பிற பதிவுகள்

அடுத்த வாரம்...

ஆரோக்கியம் தரும் திட உணவுகள் குறித்து அடுத்த வாரப் பகுதியில் பார்ப்போம்!