ஜூன் 21ம் தேதியன்று உலகின் பல நாடுகளில் நடைபெறவிருக்கும் முதல் உலக யோகா தின கொண்டாட்டங்களில் ஈஷாவின் பங்களிப்பு என்ன? தெரிந்துகொள்வோம் வாருங்கள்..

12,000 வருடங்களுக்கு முன் நம் கலாச்சாரத்தில் தோன்றிய யோகா இன்று பல நாடுகளில் மனித நல்வாழ்விற்கு வழியாய் இருந்து வருகிறது. இதற்கு இன்னும் மெருகு சேர்ப்பது போல் அமைந்ததே உலக யோகா தினம்!

இந்த தினம் அந்த தினம் எல்லா தினமும் வந்தாச்சு! இப்போ யோகாவுக்கும் ஒரு தினமா என்று யாரும் சாதாரணமாகக் கேட்டுவிட வேண்டாம். யோகாவை ஒவ்வொரு மனிதனின் வாழ்வின் அங்கமாக ஆக்குவதற்கு இந்த யோகா தினம் ஒரு நல்ல வாய்ப்பு என்று சொல்லலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இலவச யோகாவை வழங்கும் தன்னார்வத் தொண்டர்கள்

இந்த தினத்தன்று, ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் ஒரு அசாத்தியமான செயலை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளனர். நம் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் யோகா செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, சத்குரு அவர்கள் எளிய யோகப்பயிற்சி ஒன்றை வடிவமைத்துள்ளார். இதனை அனைவருக்கும் கொண்டு செல்ல ஆயத்தமாகியுள்ளனர் நம் தன்னார்வத் தொண்டர்கள். வகுப்பு எடுப்பதற்கு பயிற்சி எடுத்துக் கொண்ட இவர்கள், அனைத்து இடங்களுக்கும் சென்று யோகப் பயிற்சிகளை இலவசமாக கற்றுத்தரவிருக்கிறார்கள்.

இந்த யோகாவை வெறும் 1 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். விருப்பம் இருந்தால் அவரவர் வீட்டிலேயே வகுப்பு நடத்திக் கொள்ளலாம். உங்கள் அலுவலகத்தில், அப்பார்ட்மென்ட்டில், வீடுகளில், எங்கு வேண்டுமானாலும் வகுப்பினை நிகழ்த்தலாம்.

தமிழகத்தில் மட்டும் 5000திற்கும் அதிகமான பயிற்சி பெற்ற தொண்டர்கள் ஜூன் மாதம் முழுவதும் பட்டி தொட்டிகளிலும், மூலை முடுக்குகளிலும், நாள்-கிழமை பாராமல் இலவச யோக வகுப்புகளை வழங்க உள்ளனர்! இந்தியா முழுவதும் பல ஊர்களில், பல மொழிகளில், இவ்வகுப்புகள் நிகழவுள்ளன.

ஜூன் 21 - சென்னையில் சத்குரு...

சென்னையில் யோகா தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடும் வகையில் சத்குருவின் மகாசத்சங்கம் நிகழவிருப்பது யோகா தினத்திற்கு இன்னும் சிறப்பு சேர்க்கிறது. இது ஈஷாவின் கொண்டாட்டமாக இல்லாமல், உலக மக்களின் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். இந்நிகழ்வில் நீங்களும் கலந்துகொள்ளலாம்.

சென்னை மற்றும் பெரு நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களிலும், கார்ப்பரேட் ஆபீஸ்களிலும் பல தரப்பட்ட மக்களை சந்தித்து வருகின்றனர் நமது ஈஷா தன்னார்வத் தொண்டர்கள்! இதுவரை திறக்கப்படாத பல திரைகள் இப்போது விலகுவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஈஷா யோகா வகுப்புகள் அவரவர் அலுவலகங்களில் நடத்த பல நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன!

வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், அடுக்குமாடி வீடுகள், பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் யோக விதையை விதைக்க முனைப்புடன் உள்ளனர்!

நீங்கள் வசிக்கும் இடங்களிலும், பணிபுரியும் அலுவலகங்களிலும் இலவச ஈஷா யோகா வகுப்பு நடத்த வழி வகுத்துக் கொடுக்கலாம். உங்கள் உயர் அதிகாரி அல்லது HR-ரிடம் பேசி அனுமதி வாங்குவதற்கும் ஒரு குழு தயாராக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளவும்:

சென்னை: 83000 11000
மேற்கு மண்டலம்: 83000 45000
வடக்கு மண்டலம்: 83000 31000
தெற்கு மண்டலம்: 83000 98444
கிழக்கு மண்டலம்: 83000 98222