சிவன் அழிக்கிற கடவுள் என்றாலும், அவரே மிகவும் கருணையானவரும்கூட. சிவனின் கருணையை எடுத்துரைக்கும் பல கதைகள் யோக மரபில் குறிப்பிடப்பட்டுள்ளன. நம்புவதற்கு அரிதாக ஒருபுறம், மற்றொரு புறம் மிக விளையாட்டுத்தனமாய். ஒருபுறம் ஆச்சரியமிக்கவனாய், அதேசமயம் சாதரணமானவனாய் என சிவனின் அன்புள்ளத்தை பிரதிபலிக்கும் பல கதைகள் கூறப்பட்டுள்ளன.

புலிப்பாதர் என்ற யோகியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வியாக்ரபாதர் என்றும் அவரை அழைப்பர். அவர் மத்திய இந்திய பிரதேசத்தில் வாழ்ந்த ஒரு யோகி, சிவபக்தர். சிவனுக்கு அர்ப்பணிப்பதற்காக தினமும், காட்டிற்குச் சென்று வில்வ இலையைப் பறிப்பது அவரது வழக்கம். காட்டின் கடினமான நிலப்பரப்பும், முட்களும் அவர் பாதங்களைக் கிழித்தன. இது அவரது திருப்பணிக்குத் தடையாகக் இருந்தது. அதனால், எந்தவித தடையும் இன்றி சிவனுக்கு வில்வ அர்ப்பணம் செய்ய, தனக்கு புலிப்பாதங்களைத் தருமாறு சிவனிடம் வேண்டினார், சிவனும் அவர் கேட்டவுடனே அவருக்கு புலிநகங்களை அருளினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

புலிப்பாதங்களைப் பெற்றதால் இவர் புலிப்பாதர் என்று அழைக்கப்பட்டார்.


குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018
நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.