நம் சமுதாயம் காதலில் வெற்றி பெற்றவர்களை கவனிப்பதை விட, தோல்வி அடைந்தவர்களையே அதிகம் கவனிக்கிறது. அடுத்தவர்களின் பிரச்சனையை வேடிக்கை பார்ப்பதில் ஆர்வம் காட்டும் மனிதன், தன் வாழ்க்கை மட்டும் எப்போதும் மாறாமல் இருக்க வேண்டுமென நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?! இந்த வீடியோவில், சத்குரு அளிக்கும் விளக்கம் சமுதாயத்தின் இதுபோன்ற மனப்பான்மையைச் சாடுவதுடன், அழகான, பிரமாதமான, பிரம்மாண்டமான செயல்கள் எப்படி நிகழ்கின்றன என்பதை விளக்குகிறது!