ஈஷா ருசி

பாலக்கீரைக்கு பலவிதமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உடலுக்கு வலுவூட்டி, குளிர்ச்சியைத் தருவதுடன், மலச்சிக்கலையும் போக்கும் வல்லமை இதற்கு உண்டு. இதை சமைத்து சாப்பிடுவது நல்லது. அப்படி இல்லையென்றால், இதோ இந்த பாலக் பக்கோடாவை ட்ரை செய்து பாருங்கள்...

பாலக் பக்கோடா

தேவையான பொருட்கள் :

  • பொடியாக நறுக்கிய பாலக் கீரை - 3 கப்
  • கடலை மாவு - 1½ கப்
  • அரிசி மாவு - 2½ டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • வறுத்து அரைத்த சீரகத் தூள் - ½ டீஸ்பூன்
  • இஞ்சி விழுது - ½ டீஸ்பூன்
  • புதினா இலை - 12 (பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லி தழை - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • சூடாக்கிய எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

  • மேலே உள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • இறுதியாக சூடாக்கிய எண்ணெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பக்கோடாவிற்கு தேவையான பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • பஜ்ஜி மாவைப் போல் நீர் பதத்தில் இல்லாமல் பொள பொளவென்று இருக்க வேண்டும். அப்போதுதான் பக்கோடா பொரிப்பதற்கு பதமாக, நன்றாக இருக்கும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து பாலக் கீரை கலந்து சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விடவும்.
  • அது பொன்னிறமாக ஆகும்வரை வறுக்கவும்.
  • பாலக் கலவையை வாணலியில் அளவாக போட்டால் நன்றாக மொறுமொறுவென வரும்.
  • இந்த பக்கோடாவை காற்று போகாமல் மூடி வைத்தால் 2, 3 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.