இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சத்குருவிடமிருந்து ஒரு கவிதை - தனக்குள் எரிந்துகொண்டிருக்கும் குளிர்ந்த தீயைப் பற்றி...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பார்வையற்றோர்க்கான ஒளி

என் மனத் தீ
என் இதயத் தீ
என் உடல் தீ
என் இருப்பின் பெரும் தீ
ஒன்றாய் ஆக்கினேன் குளிர்ச்சித் தீயாய்.

என் தீயின் குளிர்ச்சியே ஆக்குகிறது
என் தீயை நிபந்தனை அற்றதாய்.
என் தீக்கு பிராணவாயு தேவையில்லை
அது நீரின் அடியிலும் இல்லை, பனிகட்டியிலும் இல்லை
அல்லது குளிர்பிரதேசத்திலும் இல்லை
என் தீ ஒளியாக நித்தம் மலர்கிறது

அந்த ஒளி புலன்களுக்கு அப்பால் ஆனது
அந்த ஒளி நிரந்தரமானது
அந்த ஒளி பார்வையற்றவரும் காணமுடியும்

உங்கள் அறியாமையை எரித்துவிடுங்கள்
எனது குளிர்தீயைக் கொண்டு.

Love & Grace