மூட்டுவலி நீக்கும் முடக்கத்தான் பிடி கொழுக்கட்டை
கை, கால், மூட்டு வலிக்கு சிறந்த மூலிகை மருந்தாக அறியப்படும் முடக்கத்தான் இலையைக் கொண்டு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி? ரெசிபி இதோ...
ஈஷா ருசி
கை, கால், மூட்டு வலிக்கு சிறந்த மூலிகை மருந்தாக அறியப்படும் முடக்கத்தான் இலையைக் கொண்டு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி? ரெசிபி இதோ...
Subscribe
முடக்கத்தான் பிடி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் இலை - 2 கைப்பிடி
பச்சரிசி - ¼ கிலோ
சிவப்பு மிளகாய் - 4
மிளகு - ¼ டீஸ்பூன்
தேங்காய் - ½ மூடி
நெய் - 50 மி.லி
பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்
செய்முறை:
முடக்கத்தான் இலையை நன்கு கழுவி, பொடியாய் நறுக்கிக் கொள்ளவும். பச்சரியை நன்கு ஊறவைத்து கழுவி, தேங்காயைத் துருவி, சிவப்பு மிளகாய், தேங்காய் பூ இரண்டையும் பச்சரிசியுடன் சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் முடக்கத்தான் இலையை துவரும்படி வதக்கவும். மிளகைப் பொடி செய்து, மிளகுப் பொடி, உப்பு, வதக்கிய முடக்கத்தான் இலை ஆகியவற்றை அரைத்த பச்சரிசி மாவில் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, கலந்து வைத்த மாவைப் போட்டு நிறம் மாறும்வரை வதக்கவும். பின் இறக்கி ஆற வைக்கவும். பின் நெய்யைத் தொட்டுக்கொண்டு பிடி கொழுக்கட்டைகளாய் பிடித்து ஆவியில் வேகவிடவும். இந்த கொழுக்கட்டை மூட்டு வலி, வாய்வு பிடிப்புக்கு மிகவும் நல்லது. ஆவியில் வேக வைப்பதால் இதன் மருத்துவத்தன்மை முழுமையாய் கிடைக்கும்.