iyo-blog-banner

டாக்டர். பவானி பாலகிருஷ்ணன்: 

நம் உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்துவிடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன.

பெண்கள் மார்பகங்களைச் சுய பரிசோதனை (மாதம் ஒரு முறை) செய்து கொள்வதன் மூலமும், மருத்துவர் மூலம் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வதன் மூலமும், மேமோகிராபி (mammography) மூலம் பரிசோதனை (40 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்துக்கு ஒரு முறை) செய்துகொள்வதன் மூலமும் மார்பகக் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

எல்லாக் கட்டிகளுமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால் மீண்டும் தோன்றுவதில்லை; அவை உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதில்லை.

புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

breast cancer symptoms in tamil, மார்பக புற்றுநோய் அறிகுறிகள்

புற்றுநோய்க்கு காரணம் என்ன?

இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணி இல்லை. அடிப்படையாக உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது. பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு.

மார்பகச் சுயபரிசோதனை (Breast self-examination):

பெண்கள் மார்பகங்களைச் சுய பரிசோதனை (மாதம் ஒரு முறை) செய்து கொள்வதன் மூலமும், மருத்துவர் மூலம் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வதன் மூலமும், மேமோகிராபி (mammography) மூலம் பரிசோதனை (40 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்துக்கு ஒரு முறை) செய்துகொள்வதன் மூலமும் மார்பகக் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

சில குறிப்புகள்:
  • நீங்கள் சுயமாகப் பரிசோதனை செய்யத் தொடங்கும்போது சரியாகப் பரிசோதிக்கிறோமா என்ற சந்தேகம் வரலாம். ஆனால், தொடர்ந்து பரிசோதனை செய்து வரும்போது மார்பகங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் மிகவும் எளிதாகக் கண்டு தகுந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
  • மாதம் ஒருமுறை செய்வது அவசியம்.
  • மாதவிடாய் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு செய்தால், அசௌகரியம் இல்லாமல் இருக்கும்.
  • மாதவிடாய் நின்றவர்கள் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து பரிசோதனை செய்யவும்.
  • மார்பகம் மட்டுமின்றி அக்குள் பகுதிகளையும் பரிசோதிக்கவும்.

மார்பக புற்றுநோய் அறிகுறிகள் (Breast Cancer Symptoms in Tamil):

சுயபரிசோதனையின்போது நீங்கள் கவனிக்க வேண்டியவை:

  • மார்பகம், அக்குள் பகுதிகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
  • மாற்றம் ஏற்பட்டிருந்தால், இது தொடர்ந்து சில நாட்கள் நீடிக்கிறதா?
  • இயற்கையாகவே நாளமில்லாச் சுரப்பிகளினால் ஒவ்வொரு மாதமும் மார்பகங்களில் சுழற்சியாக மாற்றங்கள் ஏற்படும். தொடர் பரிசோதனை மூலம் இயற்கையாக நிகழும் மாற்றத்துக்கும், புதிதாகத் தோன்றியுள்ள மாற்றங்களுக்கும் வித்தியாசம் கண்டுகொள்ள முடியும்.
  • மார்பகங்களில் ஏதேனும் வித்தியாசம் தொடர்ந்து கவனித்தால் மருத்துவரை உடனடியாக அணுகவும்.

இச்செய்தியினை மற்ற பெண்களுடன் பகிர்ந்து கொள்ளவும். தவறாமல் தொடர்ந்து பரிசோதனை செய்து பயன்பெறவும்.

மார்பகச் சுய பரிசோதனை செய்துகொள்வதற்கான 5 படிகள்: (மாதம் ஒரு முறை)

படி 1: கண்ணாடியின் முன் நின்றுகொண்டு தோள்பட்டையை நேராகவும், கைகளை இடுப்பிலும் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் பரிசோதிக்க வேண்டியது:

  • மார்பகங்கள் வழக்கமான அளவிலும், வடிவிலும், நிறத்திலும் இருக்கிறதா?
  • வீக்கம் போன்றவை இல்லாமல் மார்பகங்கள் சரியான வடிவத்துடன் இருக்கிறதா?

கீழ்க்கண்ட மாற்றங்கள் இருந்தால் மருத்துவரிடம் செல்லவும்.

  • மார்பகத்தின் தோல் பகுதியில் சுருக்கம் அல்லது வீக்கம்
  • முலைக்காம்பு உள்நோக்கி இழுக்கப்பட்டிருத்தல்
  • மார்பகங்களில் புண், வலி, சிகப்பு நிறம், தடிப்பு ஆகியவை இருத்தல்.

படி 2: இப்போது உங்கள் கைகளை உயர்த்திக்கொண்டு மேற் சொன்னவாறு அனைத்தையும் மீண்டும் கவனியுங்கள்

self breast examination, மார்பகப் புற்றுநோய் -  அறிகுறிகள்,  தடுக்கும் வழிமுறைகள் (Breast Cancer Symptoms and Ways to reduce Breast Cancer risk)

 

 

 

 

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

 

 

 

படி 3: கண்ணாடி முன் நின்று கொண்டு முலைக் காம்புகளில் ரத்தம் அல்லது நீர் அல்லது பால் அல்லது மஞ்சள் நிறத் திரவம் வெளிப்படுகிறதா எனக் கவனிக்கவும்

படி 4: படுத்துக்கொண்டு வலது கையினால் இடது மார்பையும் இடது கையினால் வலது மார்பையும் கீழ்க்கண்டவாறு பரிசோதிக்கவும்.

விரல்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு விரல் நுனிகளால் படத்தில் உள்ளது போல் அழுத்தமாகவும் மென்மையாகவும் சிறிய வட்டங்களாக மார்பகம் முழுமையும் அழுத்திப்பார்க்கவும் (தோள்பட்டை எலும்பில் இருந்து வயிற்றின் மேல்பாகம் வரை, அக்குளில் இருந்து நெஞ்சின் நடுப்பகுதி வரை). முலைக்காம்பில் இருந்து ஆரம்பித்து வட்ட வடிவில் சிறிய வட்டத்தில் இருந்து பெரிய வட்டமாக மார்பகத்தின் வெளிப்புறம் வரை பரிசோதிக்கவும். மேலும், மேலிருந்து கீழாக அழுத்தித் தடவிப் பார்க்கவும். பலருக்கு இது சிறந்த முறையாகத் தோன்றும். அக்குள் மற்றும் மார்பகத்தின் எல்லாப் பகுதிகளையும் பரிசோதனை செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

self breast examination, இப்போது உங்கள் கைகளை உயர்த்திக்கொண்டு மேற் சொன்னவாறு அனைத்தையும் மீண்டும் கவனியுங்கள்

 

 

 

 

 

self breast examination, மார்பகப் புற்றுநோய் -  அறிகுறிகள்,  தடுக்கும் வழிமுறைகள் (Breast Cancer Symptoms and Ways to reduce Breast Cancer risk)

படி 5: இறுதியாக நின்றுகொண்டோ, உட்கார்ந்துகொண்டோ மார்பகத்தை அழுத்தி தடவிப் பார்க்கவும். மார்பகம் ஈரமாக இருக்கும்போது இப்படிப் பரிசோதிப்பது பெரும்போலோருக்கு எளிதாக இருக்கலாம். எனவே குளிக்கும்போது இப்படிப் பரிசோதித்துக் கொள்ளலாம். படி 4-ல் சொன்னதுபோலவும் பரிசோதிக்கலாம்.

self breast examination, மார்பகப் புற்றுநோய் -  அறிகுறிகள்,  தடுக்கும் வழிமுறைகள் (Breast Cancer Symptoms and Ways to reduce Breast Cancer risk)

 
 
 
 

மார்பகப் புற்று நோய்(Breast Cancer) பற்றி சத்குரு:

சத்குரு : 

புற்றுநோயை உருவாக்கும் உயிரணுக்கள் நம் எல்லோர் உடலிலும் இருக்கிறது. யோக விஞ்ஞானத்தில், இந்த புற்றுநோய் உயிரணுக்களை நம் சமூகத்தில் இருக்கும் குற்றவாளிகளுக்கு ஒப்பாகப் பார்க்கிறோம். சமூகத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில பல குற்றங்களை அக்குற்றவாளிகள் செய்து கொண்டிருந்தால், அது சமூகத்தை பெரிதாகப் பாதித்துவிடாது. ஆனால், அவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே இடத்தில் குழுவாய் வேலை செய்யத் துவங்கினால், அங்கே பிரச்சனைகள் உருவாகத் துவங்குகிறது. இதைப் போலவே, நம் உடலிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் புற்றுநோய் உயிரணுக்கள் இருக்கும்வரை, அது உங்கள் வாழ்வையோ, உடல் ஆரோக்கியத்தையோ எவ்வகையிலும் பாதிக்காது. 

யோக விஞ்ஞானத்தின்படி, உங்கள் சக்தி உடலில் எங்கெல்லாம் சிறு இடைவெளிகள் ஏற்படுகிறதோ, அவ்விடமெல்லாம் புற்றுநோய் உயிரணுக்கள் ஒன்றுகூடி வளர ஏதுவான இடமாக மாறிவிடுகிறது. ஒருவரின் சக்தி உடலில் இந்த இடைவெளிகளை உருவாக்குவது அம்மனிதரின் குணம், பழக்கவழக்கமாய் இருக்கலாம், அவர் உண்ணும் உணவு வகைகளாய் இருக்கலாம், அவரது வாழ்க்கை முறையாய் இருக்கலாம் அல்லது இதுபோல் ஏதோ ஒரு காரணத்தால் சக்திமண்டலம் பாதிப்படையும்போது, இந்த இடைவெளிகள் உருவாகலாம். எனவே, உங்கள் உடலின் எந்தெந்த பகுதிகளில் சக்தியோட்டம் குறைவாக இருக்கிறதோ, அவ்விடங்களில் இப்புற்றுநோய் உயிரணுக்கள் ஒளிந்து கொண்டு பெருகத் துவங்கிவிடும்.

மார்பகப் புற்று நோய் வர முக்கியமான காரணம்

இன்று, மார்பகப் புற்றுநோய் பெண்களிடையே அதிகளவில் பெருகிவர முக்கிய காரணம் அவர்கள் கருத்தரிக்காமல் இருப்பதுதான். கருத்தரிக்காமல் இருப்பதால் பெண்கள் இவ்வுலகிற்கு செய்வது நன்மைதான் என்றாலும், உடலளவில் இதை சற்றே கூர்ந்து கவனிக்க வேண்டி இருக்கிறது. இன்று கருத்தரிக்கும் பெண்களும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். அதனால் அவர்களது வாழ்வில் மீதமிருக்கும், கருத்தரிக்கக் கூடிய 15 லிருந்து 20 ஆண்டுகள் வரை அவர்கள் உடலில் தேவையான ஹார்மோன்கள் சுரந்தாலும், அதை பயன்படுத்துவதில்லை. இதுதான் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோயும், கருப்பை புற்றுநோயும் வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.

breast-feeding-மார்பகப் புற்றுநோய் -  அறிகுறிகள்,  தடுக்கும் வழிமுறைகள் (Breast Cancer Symptoms and Ways to reduce Breast Cancer risk)மார்பகங்கள் உருவாக்கப்பட முக்கிய காரணமே, ஒரு தாய், உணவு உண்ண அறியா தன் பச்சிளங் குழந்தைக்கு சத்தான உணவை பாலாய் சுரப்பதற்குத்தான். ஆனால், இன்று அது தேவையான அளவுக்கு உபயோகிக்கப்படுவதில்லை. அல்லது மிக சிறிய வயதிலே பயன்படுத்தப்பட்டு, அதன்பின் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. ஒரு பெண் 16 அல்லது 18 வயதில் துவங்கி, 45 வயது வரை இடைவிடாது கருத்தரித்துக் கொண்டே இருந்தால், அந்தச் செயல் அவளது முழு உடலையும் சுறுசுறுப்பாய் வைத்து, சக்தியோட்டத்தையும் சீராக வைத்திருக்கும். ஆனால், இன்று அப்பாகங்களுக்கு வேலை இல்லாமல் இருப்பதால், அங்கு சக்தியோட்டம் குறைவாக உள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலை, புற்றுநோய் உயிரணுக்களை ஈர்ப்பதால், இவ்விடத்தில் அவை குழுமி, தம் வேலையைத் துவக்கு-கின்றன.

அப்படியென்றால், ஒவ்வொரு பெண்ணும் தொடர்ந்து பிள்ளை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. இதற்கு மாற்று வழிகள் உண்டு.

மார்பகப் புற்று நோய் - தடுக்கும் வழிமுறைகள்

ஏகாதசி விரதம்:

இதைத் தடுப்பதற்கு மிக மிக எளிய வழிமுறை, உபவாசம். புற்றுநோய் உயிரணுக்களின் ஒரு முக்கிய அம்சம், அவை செழித்து ஓங்க அவற்றிற்கு அதிக அளவில் உணவு தேவைப்படும். சாதாரண உயிரணுக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், புற்றுநோய் உயிரணுக்களுக்கு 30% அல்லது அதையும் விட அதிகமாக உணவு தேவைப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு சில நாளில் (ஏகாதசி நாட்கள்) உங்கள் உடலிற்கு உணவு தர மறுப்பதன் மூலம், இந்தப் புற்றுநோய் உயிரணுக்களை கட்டுப்படுத்தலாம்.

யோகப் பயிற்சிகள்:

shakti-chalana-kriya-மார்பகப் புற்றுநோய் -  அறிகுறிகள்,  தடுக்கும் வழிமுறைகள் (Breast Cancer Symptoms and Ways to reduce Breast Cancer risk)

இதைத் தவிர ஒரு சில யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலமும் உங்கள் ஹார்மோன்கள் சுரக்கும் அளவை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். ஈஷா யோக மையத்தில், ‘சக்தி சலன க்ரியா’, மற்றும் சில யோகாசனங்கள் கற்றுத் தரப்படுகிறது. இவற்றை முறையாகக் கற்று, தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால், உங்கள் அமைப்பை சமநிலையுடன் செயல்படச் செய்ய முடியும். 

Polycystic-Ovaries-மார்பகப் புற்றுநோய் -  அறிகுறிகள்,  தடுக்கும் வழிமுறைகள் (Breast Cancer Symptoms and Ways to reduce Breast Cancer risk)கருப்பை சம்பந்தமான நோயினால் அவதிப்பட்ட பல பெண்கள், உதாரணமாக ‘பாலி சிஸ்டிக் ஓவரி’ (polycystic ovaries, கட்டிகள் போன்று கெட்டியான எல்லை கொண்ட உயிரணுக்கள் பல, கருப்பையில் உருவாவது) போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்ததிலேயே முற்றிலுமாய் குணமடைந்துவிட்டனர். இதை செய்வதால் உங்கள் உடலில் ஹார்மோன்கள் சுரப்பது சமநிலை அடைகிறது. நீங்கள் உண்ணும் உணவாலோ, உங்கள் வாழ்க்கை முறையாலோ தடுமாறாமல், இந்த யோகப் பயிற்சிகள் அவற்றை சரியான அளவில் சுரக்கச் செய்கின்றன.

எந்த அளவிற்கு இந்த யோகப் பயிற்சிகள் அவர்கள் குணமாக வழி செய்தது என்பதை நிரூபிக்க நம்மிடம் சான்றுகள் இல்லை. ஆனால், இப்பயிற்சிகளை செய்வதினால் அவர்கள் மிக சீக்கிரமாக குணமடைந்தார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். கீமோதெரபி (chemotherapy) வகையான சிகிச்சையில் மிக எளிதாக இவர்கள் குணமடைந்தது, இவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த யோகப் பயிற்சிகளை செய்தே குணமடைந்துவிட்டார்களா என்பதை நம்மால் திட்டவட்டமாகக் கூறிட முடியாது. ஆனால், அந்த மருத்துவ சிகிச்சை எளிதாக பலனளிக்க, இந்த யோகப் பயிற்சிகள் நிச்சயமாக உதவுகிறது.
 

யோகாவின் உதவியுடன் மார்பகப் புற்றுநோயை வென்றவரின் அனுபவப் பகிர்வு:

குறிப்பு:

‘சக்தி சலன க்ரியா’ என்பது ‘சூன்ய தியானம்‘ என்ற யோக வகுப்பின் ஒரு அங்கமாக கோவை ஈஷா யோக மையத்தில் கற்றுத் தரப்படுகிறது. விபரங்களுக்கு: (0422) 2515300

புற்றுநோய் பற்றிய பிற பதிவுகள்:

1) புற்றுநோய் அறிகுறிகள், தவிர்க்கும் வழிமுறைகள்

சப்தமில்லாமல் நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களுள் புற்று நோயும் ஒன்று. இது வந்துவிட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, அதற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டாலும், மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகம்தான். புற்றுநோய் அறிகுறிகள் (Cancer Symptoms) மற்றும் இந்த நோயிலிருந்தும் இதனால் ஏற்படும் பயத்திலிருந்தும் விடுபடும் வழியை தருகிறது இக்கட்டுரை.

2) ஏகாதசி விரதம் - கேன்சரை குணமாக்குமா?

விரதம் என்பது உங்கள் உடல் உங்களிடம் கேட்கும் இடைவேளை. இதனை புரிந்துகொள்ளும் சூட்சுமம் பலருக்கும் இல்லாததால், இந்தியாவில் ஏகாதசி என்னும் ஒரு நாளை குறிப்பிட்டு வைத்தனர்...

3) புற்றுநோயை அண்ட விடாது மஞ்சள்!

மஞ்சள் என்றால் மங்களம் என்பதும், ஆரோக்கியத்திற்கு உகந்தது என்பதும் நமக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனினும், மஞ்சள் குறித்த `க்ளோசப் பார்வை`இங்கே...

4) புற்றுநோய்க்கு கீமோதெரபி... சத்குருவின் பார்வை என்ன?

கேள்வி: கடந்த மாதம் எனக்கு புற்றுநோயின் இரண்டாம் அட்டாக் வந்திருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகளை என் உடல் ஏற்றுக்கொள்ளும் விதத்தைப் பொறுத்துத்தான் நான் இதிலிருந்து மீண்டுவருவது இருக்கிறது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஏற்றுக் கொள்வது என்றால் என்ன என்று எனக்குள் குழப்பமாய் இருக்கிறது. என் நரம்புகளுக்குள் பாயும் மருந்துகளை நான் அப்படியே மௌனமாக ஏற்றுக்கொள்வதா? இல்லை, இந்த நோயை எதிர்த்து போரிடுவதா? இதனை நான் எப்படி அணுகுவது?

5) கேன்சர் - நவீன சமூகத்தின் நோய்!

கேன்சர் நோயைப் பற்றி சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கும் சத்குரு, அதற்கான காரணிகளையும், அதனால் உண்டாகும் அபாயங்களை நவீன சமுதாயம் எப்படி குறைக்க முடியும் என்பதைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறார்...

6) புற்று நோயை குணப்படுத்தும் பழங்கள்

'முக்கனி' இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த விசேஷங்களும் நடைபெறாது. ஆனால், இப்போதோ ஏதேதோ டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் ஜூஸ் வகைகளை ஸ்டைலாக குடிக்கத் துவங்கிவிட்டோம். கடைத் தெருவில் சாதாரணமாக நாம் பார்க்கும் பழங்கள் புற்று நோயையே குணப்படுத்தும் உண்மையை விளக்குகிறார் நம்மாழ்வார்; கனிகள் பற்றி நம்மாழ்வார் கூறும் கனிவான கருத்துக்கள் இங்கே!

7) புற்றுநோய் போயே போச்சு! தேங்க்ஸ் டூ யோகா!

Non-Hodgkin lymphoma எனும் ஒருவகை புற்றுநோயால் தாக்கப்பட்டவர் ஜிம் ஃபெஸெடன். இந்த நோய் முழுதாக முற்றிப்போய், நிணநீர் நாளங்களையும் தாண்டி எலும்பு மஜ்ஜை, கணையம், நுரையீரல் போன்ற பிற உறுப்புகளுக்கும் புற்று பரவத் தொடங்குகிறது. மரணத்தின் எல்லைகளை தொட்டுப் பார்க்கும் இத்தகைய 4ஆம் நிலை புற்றுநோயுடன் வாழ்ந்த ஜிம் ஃபெஸெடன் எப்படி அதிலிருந்து மீண்டார்? அவர் வார்த்தைகளில் படியுங்கள்.

8) புற்றுநோயும் புனிதமானது...

திரும்பிய திசையெங்கும் அறிவிப்புகள், சர்ச்சையை கிளப்பும் சிகிச்சை முறைகள் என தனக்கே உரிய சாதகப் பாதகங்களோடு நம் வாழ்வின் அங்கமாகிவிட்டது புற்றுநோய். வந்தால்தான் தெரியும் என்று சொல்பவர்கள் போய் இன்று அனுபவமாகவே வாழ்ந்து கொண்டிருப்போர் பலர். தன்னை ஆட்டிப் படைத்த புற்றுநோயிலிருந்து மீண்டு வெளியேறிய திருமதி. சித்ராதேவி அவர்களுக்கு புற்றுநோயும் புனிதமானது! எப்படி?