கவிதை - கிருஷ்ணனுக்காக

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், கிருஷ்ணனுக்காக ஒரு கவிதையை வடித்துள்ளார் சத்குரு. மனதை மயக்கும் அந்த நீலநிற இடையனை, அவன் நம் உள்ளம் வருடிய அந்த உண்மையை, தன் கவிதையில் நயமாய் வடித்துள்ளார். படித்து மகிழுங்கள்!

கிருஷ்ணனுக்காக...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஓ,
நீல நிற
இடையனே!

உனக்கு விளையாட்டுத்தான்
காதல் மோதல்
எதிலுமே..

"யாரை நீ
கொன்றாலும்
காதல் கொண்டாலும் கவலை இல்லை" என்பவனே

விளையாட்டு
விளையாட்டு
எப்பொழுதுமே!

அந்தக்
கள்ளத்தனத்தின்
கிரக்கத்தில்

அவன்
விளையாட்டின்
ஊடே உள்ள
விவேகத்தின்
உச்சத்தை, கவனிக்க தவறாய் மனமே!

கொள்ளைக் கொள்ளும்
ஒரு காதல்,
விளையாட்டாய் ஒரு
போர்

ஒ! நீல வண்ண
மேனியனே

உன்னைப் போல்
இதுவரை
இங்கு
யாருமிலர்..

விளையாட்டாய்
காதல் செய்ய
விளையாட்டாய்
போரிட...

Love & Grace