சரியான புரிதல் இல்லாமல் கணவன்-மனைவிக்கு இடையே நிலவும் சச்சரவுகளை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் நகைச்சுவைகள் சுவாரஸ்யமானவை! சத்குரு சொன்ன அப்படியொரு நகைச்சுவை உங்களுக்காக!

சத்குரு:

ஹேமா தனது குடும்ப மருத்துவரிடம் சென்று, தன் கணவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். “எங்களது 20 வருட திருமண வாழ்வில் முதல் பத்து வருடங்கள் சிறப்பாக இருந்தன. அவரும் மிகவும் நல்லவராக இருந்தார். அடுத்த பத்து வருடங்களில் அவர் மிகவும் பதட்டமானவராக, எதற்கெடுத்தாலும் கோபப்படுபவராக ஆகிவிட்டார். அவரால் நான் இருக்கும் அறையில் உட்காரக்கூட முடிவதில்லை. அவருக்கு நான் என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?” என்று கேட்டார். மருத்துவர் அவரை முழுமையாக ஒரு பார்வை பார்த்து விட்டு, “உங்கள் கணவருக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை என்று நினைக்கிறேன். எனவே நான் சில தூக்க மாத்திரைகளைக் கொடுக்கிறேன். இதைச் சாப்பிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும்” என்றார். அதற்கு ஹேமா, “மிக்க நன்றி டாக்டர். இந்த மாத்திரைகளை அவருக்கு எந்தெந்த வேளைகளில், எவ்வளவு கொடுக்க வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த மருத்துவர், “மாத்திரை அவருக்கல்ல; உங்களுக்குத்தான். நீங்கள் தூக்க மாத்திரைகளைப் போட்டுக் கொண்டால், அவருக்கு சிறிது ஓய்வு கிடைக்கும்” என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.