குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. குளிரின் தாக்கத்தால் நம்மில் பலர் சளியினால் அவதிப்படுவதுண்டு. சளிப்பிரச்சனையிலிருந்து விடுபட ஈஷா ஆரோக்யாவிலிருந்து சில வீட்டு வைத்தியக் குறிப்புகள் உங்களுக்காக...

சளிப்பிரச்சனையிலிருந்து விடுபட ஈஷா ஆரோக்யாவிலிருந்து சில வீட்டு வைத்தியக் குறிப்புகள்:
  • துளசி மற்றும் மிளகு: ஒரு கை பிடி துளசி இலைகளை 10 கருப்பு மிளகுடன் நன்றாக அரைத்து ஒரு நாளைக்கு மூன்றுமுறை சாப்பிடவும்.
  • ஸ்பானிஷ் தைம் மற்றும் மிளகு: 7 ஸ்பானிஷ் தைம் இலைகளை 10 கருப்பு மிளகுடன் ஒன்றாக சேர்த்து அறைத்து, ஒரு நாளைக்கு 3 முறை உட்கொள்ளுங்கள். “நாட்டுபுற இலை அல்லது மூலிகைகளின் ராணி” என்று அழைக்கப்படும் ஸ்பானிஷ் தைம், இந்தியாவில் கற்பூரவல்லி இலை(தமிழ்) என்று கூறுவதுண்டு.
  • இஞ்சி சாறு: முக்கால் கப் தண்ணீரில், 4 தேக்கரண்டி இஞ்சிசாறு, 4 தேக்கரண்டி தேன், 4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து அருந்தவும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.