ஈஷாவில் நடந்தவை…
புத்தாண்டும் பிறந்தது, பல நினைவுகள் நெகிழ வைத்தது, உறுதிமொழிகளும் எடுக்கப்பட்டது, உழவர் திருநாளை எதிர்நோக்கி கொண்டாட்டங்கள் துவங்கப்பட்டது, சத்குருவின் வருகையும் பலரை மலர வைக்கக் காத்திருக்கிறது. இந்த வார ஈஷாவில் நடந்தவைகளை தொடர்ந்து படியுங்கள்...
Subscribe
அன்புள்ள ஈஷா யோகா மையத்தினருக்கு...
வணக்கம். நான் இதயம் நல்லெண்ணை நிர்வாகத்தில் பணியாற்றி வருகிறேன். நான் 2013 சென்னை மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு சீனியர் பிரிவில் ஏழாவது இடம் பெற்றுள்ளேன். தாங்கள் ஏழை மாணவர்களின் நல்வாழ்விற்காகப் போட்டியில் பங்கேற்றது, எனக்கு பெருமையாக உள்ளது. மேலும் அனைத்து மக்களும் நல்வழியில் நடக்க மூச்சுப்பயிற்சியும் தியானமும் கற்றுக் கொடுத்து வருகிறீர்கள். இவற்றை கற்றுக் கொடுத்து உலக மக்களை நல்வழிப்படுத்தும் தங்கள் இயக்கம் மேலும் மேலும் வளர வேண்டும். 75 வயதுடைய நானும், எங்கள் விருதுநகர் நடையாளர்கள் சங்கமும் உங்களை மனதார வாழ்த்துகிறோம்.
மனோகரன், விருதுநகர்
நாகர்கோவிலில் நடந்த 21 நாள் விரதத்திற்கான தீட்சை...
விரதத்தில் பங்குகொள்ள விரும்புவோர், தொடர்புக்கு 83000 30666
சத்குரு எங்கள் ஊருக்கு எப்போது வருவார் என்று ஏங்கிய சிங்கப்பூர் ஈஷா அன்பர்களின் கனவினை நினைவேற்றும் வகையில், ஜனவரி 12ம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை 6.30 வரை சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சத்குருவின் "மிஸ்டிக் ஐ" (Mystic Eye) நிகழ்ச்சி சிங்கப்பூர் வாசிகளுக்கான ஒர் அரிய வாய்ப்பு.சத்குருவின் சிங்கப்பூர் வருகையை அனைவரிடமும் பகிர்ந்திடுங்கள்...
மேலும் தொடர்புக்கு: https://www.ishayoga.sg/mystic-eye-registration