ஈஷாவில் நடந்தவை…
இந்த வாரம் ஈஷாவில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் செயல்நிலையிலும், மக்களைச் சென்றடைவதிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. மஹாசிவராத்திரி, கலையின் கைவண்ணம், சம்யமா, இன்னர் வே என களைகட்டிய இந்த வாரம் ஈஷாவில் நடந்தவைகளைப் பற்றி ஒரு பார்வை இங்கே...
ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 27 அன்று நடைபெற்ற மஹாசிவராத்திரி திருவிழா இந்த வருடம் பல லட்சம் மக்களை ஈர்த்தது. இதே நாளில் தமிழகத்தின் 80 ஈஷா மையங்களிலும், கொண்டாடப்பட்ட விழாவிலும் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபி
|
கள்ளக்குறிச்சி
|
கும்பகோணம்
|
மதுரை
Subscribe
|
நாமக்கல்
|
சேலம்
|
திருச்சி
|
திருவனந்தபுரம்
|
பிப்ரவரி 20 முதல் 27 வரை யக்ஷா, மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் நடந்த கலையின் கைவண்ணம் (Hands of Grace) - கைவினைப் பொருட்கள் கண்காட்சியிலிருந்து சில துளிகள்...
| ||
பிப்ரவரி 10 முதல் 19 வரை ஆங்கில சம்யமா வகுப்பு ஈஷா யோக மையம் ஆதி யோகி ஆலயத்தில் நடைபெற்றது. இந்த 7 நாள் மௌன நிகழ்வில் 450 பேர் கலந்து கொண்டு தீவிர தியானத்தில் திளைத்தனர்.
சம்யமாவைத் தொடர்ந்து, பிப்ரவரி 20 முதல் 25 வரை சத்குருவுடனான "இன்னர் வே" நிகழ்ச்சி, மையத்தில் நடைபெற்றது. இதில் 115 பேர் கலந்துகொண்டனர். சீன மக்கள் 40 பேர் இவ்வகுப்பில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| ||
சென்னை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற பகுதிகளிலிருந்து பாத யாத்திரை மேற்கொண்ட சிவாங்கா பக்தர்கள், கோவையில் ஒன்றுகூடி தங்கள் கடைசி கட்ட பயணத்தை தியானலிங்கத்தில் நிறைவு செய்தனர். பிப் 26, 27 தேதிகளில் 6000க்கும் மேற்பட்ட சிவாங்காக்கள் வெள்ளியங்கிரி மலையேறி தங்கள் விரதத்தை முடித்தனர்.
|