சத்குரு நடத்திய இன்னர் இன்ஜினியரிங் வகுப்பைப் பற்றியும், நீச்சலில் பரிசுகளைக் குவித்த மாணவனைப் பற்றியும் விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை...

சத்குருவுடன் இன்னர் இன்ஜினியரிங் வகுப்பு!

மும்பை மாநகரில், நவம்பர் 7 - 9 வரை சத்குரு நடத்திய 3 நாள் இன்னர் இன்ஜினியரிங் வகுப்பில் 2500 பேர் கலந்துகொண்டு ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை பெற்றனர்.

நீச்சலில் மீண்டும் பரிசுகளை வென்ற ஜெயந்த் நாக்!

நீச்சலில் மீண்டும் பரிசுகளை வென்ற ஜெயந்த் நாக்!

மாவட்ட பள்ளி கல்வித்துறையானது, விழுப்புரம் காமராஜர் நகராட்சிப் பள்ளியில் நவம்பர் 10ம் தேதியன்று மண்டல அளவிலான நீச்சல் போட்டிகளை நடத்தியது. 25 பள்ளிகளில் இருந்து வந்திருந்த 83 மாணவர்கள் இந்த போட்டிகளில் கலந்துகொண்டனர். ஈஷா வித்யாவின் மாணவர் ஜெயந்த் நாக், 50 மற்றும் 100 மீட்டர் free style பந்தயத்தில் இரண்டாம் பரிசுகளையும், 200 மீட்டர் free style போட்டியில் முதல் பரிசும் தட்டிச் சென்றார். இதன் மூலம் ஜனவரி மாதம் சிவகங்கையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன்பு நடந்த மாவட்ட அளவிலான பல போட்டிகளில் இவர் பரிசுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.