ஈஷாவில் நடந்தவை…
கடலூர் மற்றும் திருச்சியிலிருந்து ஒரு அப்டேட். அதே நேரத்தில் உங்கள் உள்ளங்களில் எழுந்த ஆதரவால் கிடைத்த வெற்றி வரலாறு ஒன்றும் இந்த வார நிகழ்வுகளில்!
கடலூர் ஈஷா வித்யா பள்ளியில் அறிவியல் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவியர் தங்கள் அறிவியல் படைப்புகளை அனைவருக்கும் படைத்தனர்.
மஹிந்திரா நிறுவனம் தொண்டு நிறுவனங்களுக்காக நடத்திய ஸ்பார்க் தி ரைஸ் போட்டியின் இறுதிச் சுற்றிற்கு தகுதி பெற்ற ஈஷாவின் அரசுப் பள்ளி தத்தெடுப்புத் திட்டம் முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் மற்றுமொரு இறுதி சுற்றில் பங்குபெற வேண்டி உள்ளது. ஈஷா இறுதிச் சுற்றில் நுழையக் காரணமாய் இருந்த உங்கள் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றி. இதன் மூலம் 7500 ஏழைக் குழந்தைகளுக்கு ஈஷாவால் ஒரு வருடத்திற்கு கல்வி உதவி அளிக்க முடியும்.
நம் திருச்சி தன்னார்வத் தொண்டர்களின் சீரிய முயற்சியினால், திருச்சி டோல்கேட்டில் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டுள்ளது. சந்நிதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இவ்விடத்தில் தியான அன்பர்கள் தியானம், யோகம் செய்யலாம். விவரங்களுக்கு: 94865 46015
Subscribe