இந்நிகழ்ச்சி பிப்ரவரி 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை  ஈஷா யோகா மையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில்  ஈஷா யோகா மையத்தின் ஸ்வாமி சிதம்பரா அவர்கள்,  கோவை மண்டல தபால் துறையின் அசிஸ்டன்ட் சுப்பரின்டென்ட் திரு P. சாய்ராம் அவர்கள், மடக்காடு முன்னாள் கவுன்சிலர் திரு. ஷண்முக சுந்தரம் அவர்கள், ஈஷா யோகா மையத்தின் திரு விஜயகுமார் அவர்கள், மடக்காடு சமூக சேவகர் திருமதி. சசி அவர்கள் கலந்து கொண்டனர். சாடிவயல், சிங்கபதி, கல்கொத்திபதி, நல்லூர்ப்பதி, முள்ளாங்காடு, தானிக்கண்டி, மடக்காடு, பட்டியார்கோவில்பதி, பச்சைவயல்பதி, ஆத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கிராம மக்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கும் முக்கியத்துவம் பற்றியும், சேமிப்பு செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் விவரிக்கப்பட்டது. திரு P. சாய்ராம் அவர்கள் பேசுகையில் "நம் வாழ்க்கை முறையில் 3 முக்கியமான செலவுகள் இருக்கிறது. அவை படிப்பு, திருமண செலவு, மருத்துவ செலவு ஆகும்.  நமக்கு  பணத் தேவை வரும்போது நம்  சேமிப்பு நமக்கு கை  கொடுக்கும்", என்றும்,  சிறு சேமிப்பு செய்ய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள செல்வ மகள் சேமிப்புத் திட்டம்,  பிரதம மந்திரியின்  விபத்து காப்பீட்டுத் திட்டம் , ஆயுள் காப்பீட்டுத் திட்டம்,  உள்ளிட்ட பல   திட்டங்கள் பற்றியும் விளக்கினார்.

2011ம்  ஆண்டு முதல் ஈஷா அவுட்ரீச்  சார்பில் ஈஷா யோகா மையத்தின் சுற்று வட்டார கிராமத்தின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வருடம் சுமார் 60 மாணவர்கள் இந்த உதவித் தொகை பெற்று கல்வி பயின்று வருகின்றனர்.  இதில் 12 பேர் பள்ளி படிப்பிற்கான உதவித்தொகையும், 41 மாணவர்கள் கல்லூரி படிப்பிற்கான உதவித்தொகையும்,  7 மாணவர்கள் பாலிடெக்னிக் (தொழிற்கல்வி )க்கான  உதவித்தொகையும் பெறுகின்றனர். இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறுசேமிப்பு விழிப்புணர்வு  முகாமில் ஈஷா அவுட்ரீச்  சார்பில் சேமிப்பு கணக்கு துவக்கி வைக்கப்பட்டது .

ஈஷா அவுட்ரீச்:

ஈஷா அவுட்ரீச், ஈஷா யோகா மையத்தின் சுற்றுப்புற  கிராமவாசிகளின் நல்வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை  நடத்தி வருகிறது. இலவச மருத்துவம் , இலவச கண் சிகிச்சை முகாம்,பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு  இலவச ரத்தசோகை தடுப்பு முகாம் போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வருகின்றது. கிராமப்புற குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கத்துடன் ஈஷா வித்யா பள்ளி செயல்பட்டு வருகிறது.  பொருளாதார சூழ்நிலையால் கல்வியை  தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு   கல்வி   உதவிதொகை வழங்கி  உதவுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.