ஒரு சில இசையைக் கேட்டாலே பலருக்கு, தானாகவே கால்கள் தாளம் போடும். ஆனால் சிலவற்றைக் கேட்டாலோ நாராசமாக இருக்கும். இப்படி இசையில் பலவகைகள் இருக்க, இசையைக் கேட்டால் உள்நிலையில் மறுமலர்ச்சி உண்டாவது எப்படி என்பதைப் பற்றி தன் சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களுடன் இதில் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு.