இன்னும் எத்தனை நாள் இந்த நாடகம்
வேண்டி வந்தது ஒன்று, பெற்றுச் சென்றது மற்றொன்று அருளுடன் கிடைத்த வரம் அற்புத உணர்வுடன் மொழிந்தது கவிதையாய்... அனுபவம்!!
சமீபத்தில் நடந்த நன்மை உருவம் பெறும் விழாவில் பங்கெடுத்து, சத்குரு வழங்கிய சாதனாவையும் செய்து வரும் திருமதி. மஹேஷ்வரி, சென்னை அவர்களின் பகிர்வு. கவிதையாய்!!
திருமதி. மஹேஷ்வரி, சென்னை.
Subscribe
இன்னும் எத்தனை நாள் - இந்த
பொருள் பின்னே!
இன்னும் எத்தனை நாள் - உன்
அருள் மழையில் நனைந்திட்ட பின்னும் உன்
திருவடிகளில் கரைந்திடாமல் –
கல்லாய் உருண்டோடும் எனையும்
வில்லால் உடைத்திடாமல்
மலர் சொல்லால் செதுக்கிய திருவே!
உயிரை தந்திட்ட ஆணும்
உடலை தந்திட்ட பெண்ணும்
உணவைத் தந்திட்ட மண்ணும்
சுவாசம் தந்திட்ட மரமும்
நேசம் தந்திட்ட மனமும்
சிறிதாகிப் போகிட
வேஷம் போடும் இந்த
“நான்“ மட்டும்
பெரிதாக தெரிந்திட
இன்னும் எத்தனை நாள் இந்த நாடகம்!
வேஷமும் கலைத்திட
கல்லையும் உடைத்திட
எப்போது வருவாய்?
உன் கருணையால் என்னை 7 சதம்
கொடுத்திட வழி தந்தாய் குருவே!
இன்றோ நூறு சதம் உருகிட ஏக்கம் கொண்டேன்!!
இன்னும் எத்தனை நாள் நான் இந்த பொருள் பின்னே?!
ஈஷாங்கா என்றால் "ஈஷாவின் அங்கம்". "ஈஷாங்கா 7%" என்பது சத்குருவுடன் கூட்டு சேர்வது. அது, சத்குருவுடன் இணைந்து அவருடைய நோக்கங்களைப் பூர்த்தி செய்ய உங்களுக்குத் கிடைத்திருக்கும் ஒரு வாயப்பு. அதே நேரத்தில் உங்கள் வாழவில் அருள் மழை பொழிந்து அதன் மூலம் நீங்கள் உச்சபட்ச நல்வாழ்வினையும் அடைய முடியும்.
விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ள
தொ.பே. 94425 04655/0422-2515378
இ-மெயில்: 7percent@ishafoundation.org