தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

6:20

விழுந்த மெல்லிய மழைச்சாரலை காற்று சற்று பொறுத்திருக்கச் சொல்ல, மெல்லிசைப் பாடலொன்றை ஈஷா இசைக்குழு இசைத்திருக்க, சத்குருவின் இருப்பில் அனைவரும் நனைந்திருக்கின்றனர்.

6:30
சத்குரு: வாழ்க்கையில் நிகழும் எல்லாம் ஒரு அலை போல, நாம் விருப்பத்துடன் இருந்தால் அந்த அலைமீது சவாரி செய்ய முடியும்.

ஆனால் இப்போது பலபேர் புதிதாக எதற்காகவும் தயாராக இல்லை. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் அதுவரை அறிந்ததில் அடமானம் வைத்துவிடுகிறார்கள். மழைத்துளி விழுந்தால் என்ன ஆகுமோ என்று அஞ்சுகிறார்கள்.

6:50
வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதை விடுத்துவிட்டு மழைத்துளிகளை இரசித்திடுங்கள்.

6:55
மீண்டும் இசைமழையில் நனைந்திருக்க மெதுவாக விடைபெற்றார். அவர் கையசைக்கக் காத்திருந்தது போல மழைத்துளிகள் பெரிதாக விழத்துவங்கியது.