அன்றிலிருந்து 33 வருடங்கள் ஆகிவிட்டன...!
தான் ஞானோதயம் பெற்று 33 வருடங்கள் ஆகிவிட்டதையும், தன் வாழ்வில் அந்நிகழ்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கத்தையும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் சத்குரு அவர்கள், அமெரிக்காவில் நடந்த ஆதியோகி பிரதிஷ்டை குறித்தும் மனம் திறக்கிறார். படித்து மகிழுங்கள்.
தான் ஞானோதயம் பெற்று 33 வருடங்கள் ஆகிவிட்டதையும், தன் வாழ்வில் அந்நிகழ்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கத்தையும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் சத்குரு அவர்கள், அமெரிக்காவில் நடந்த ஆதியோகி பிரதிஷ்டை குறித்தும் மனம் திறக்கிறார். படித்து மகிழுங்கள்.
இவ்வாண்டு, செப்டம்பர் 23ம் தேதி, நான் மேலே சென்று கீழே இறங்காதவாறு விதி விதித்த நாள். அது நடந்து 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. துடுக்கான, உறுதியான, தன் எண்ணங்களை மட்டுமே நம்பிய அந்த இளைஞன், தன் திறத்தால் இவ்வுலகையே ஆட்கொள்ள முடியுமென கருதிய இளைஞன், யாரோ ஒருவர் "உன்னால் என்ன செய்துவிட முடியும்?" என கேட்டபோது, "எனக்கு போதிய நேரம் தாருங்கள், நிலவிற்கே ஏணிப்படி அமைத்துவிடுவேன்," எனக் கூறினான்.
Subscribe
அந்த இளைஞன் அந்த மதிய வேளையில், வாயடைத்துபோய் நின்றிருந்தான். பிற விஷயங்கள் வந்து சேர்வதைப் போல் இவனிடம் அந்தவொரு விஷயமும் வந்து சேர்ந்தது. ஆனாலும், இவனைவிட்டு அது அகலவே இல்லை. அந்தவொரு பரிமாணமோ அதற்கான திறவுகோலோ, வெளிச்சமும் அல்ல இருட்டும் அல்ல, தெய்வீகமும் அல்ல தீயசக்தியும் அல்ல, சொர்க்கமும் அல்ல நரகமும் அல்ல. அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளக்கூடிய பெயரில்லா பரவசம் அது. எல்லாவற்றையும் கடந்தது அது, ஆனால், எல்லாவற்றையும் கடந்தது என நினைக்கக்கூடிய ஒன்றும் அல்ல, அப்படியொரு அம்சம் என்னை பரவசத்தில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது, நோக்கத்துடன்.
ஒன்றும் இல்லாத ஒன்றினை பகிர்ந்துகொள்ள பலரும் என்னுடன் இப்பயணத்தில் இணைந்துள்ளனர். அத்தனை அன்பு, அத்தனை பகிர்தல் - இது ஒரு வாழ்விற்கும் அப்பாற்பட்டது...!
அமெரிக்க ஈஷா யோக மையத்தில் நடந்த ஆதியோகி பிரதிஷ்டை மிகுந்த அருளுடன் நடைபெற்றது. உங்களில் 1400 பேர் இதில் நேரடியாக கலந்துகொண்டீர்கள். ஆனால், நீங்கள் ஒவ்வொருவரும், உங்களில் ஒவ்வொருவரும் இதில் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
இதுவே எனது கடைசி மூச்சு என்பது போலத்தான் நான் எப்போதும் வாழ்ந்திருக்கிறேன். ஆதியோகியின் அருள், அறிவு, சக்தி, ஞானோதயம் இவை யாவும் யாவருக்கும் கிடைக்கும்படி செய்வதற்கே நான் என் மூச்சினைப் பிடித்து வைத்திருக்கிறேன்.
உங்களுடைய கடைசி மூச்சு நிகழ்வதற்குள் நீங்களும் இதனை உணர வேண்டும். ஆனால், என்னுடைய கடைசி மூச்சு முடிவதற்குள் நீங்கள் இதனை உணர்ந்தால், அது வார்த்தையில் அடங்கா சுகத்தில் எனை ஆழ்த்திடும்.
மிகுந்த அன்புடன், அருளும்
சத்குரு