Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
கருவிகளைப் பொறுத்தவரை, மனித மனதை நீங்கள் விழிப்புணர்வாக பயன்படுத்துவீர்களானால் அதுதான் மிகவும் அதிசயமானது, ஒரு கணினியோ, காரோ, அல்லது விண்கலமோ அல்ல.
கர்மா என்றால் உங்கள் வாழ்க்கையை உருவாக்குபவராக நீங்கள் இருக்கிறீர்கள்.
மனிதர்கள் தங்களை மிகவும் பெரிதாக நினைத்துக்கொள்கிறார்கள். இங்கு நிகழ்வதில் நாம் ஒரு மிகச்சிறிய பகுதியே.
உலகம் உங்கள்மீது என்ன வீசுகிறது என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதைக்கொண்டு என்ன செய்கிறீர்கள் என்பது நூறு சதம் உங்களுடையது. இதற்குத்தான் ஸ்ரீராமர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.
மற்ற உயிரினங்கள் ஒவ்வொன்றும் பூமித்தாயின் நல்வாழ்வுக்காக வேலைசெய்துகொண்டு இருக்கின்றன. மனிதர்களாகிய நாம் மட்டும்தான் மாறத் தேவையிருக்கிறது.
உங்கள் வாழ்க்கை அனுபவம், உங்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் அல்லது எது இருக்கிறது என்பதை சார்ந்தது இல்லை, அது நீங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சார்ந்தது.
உலகிற்கு நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம், மகிழ்ச்சியான, ஆனந்தமான மனிதராக இருப்பதுதான்.
ஆன்மீகப் பாதையில் முன்னேறிச்செல்ல, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்ற கவனம் மட்டும்தான் உங்களுக்கு இருக்கவேண்டும், நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது தேவையில்லை.
நீங்கள் வெற்றியை விரும்பினால், அதற்கு நீங்களே ஒரு தடையாக இல்லாமல் இருப்பதை முதலில் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
உங்களுக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி அனுமானங்கள் செய்வது, தொடர்ந்து அறியாமையில் இருப்பதற்கான ஒரு நிச்சயமான வழி.