Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
உலகிற்கு உங்கள் பங்களிப்பு நீங்கள்தான் - நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறீர்கள், இவை அனைத்தும் தாக்கம் ஏற்படுத்துகின்றன.
நீங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை அறிய விரும்பினால், நீங்கள் உங்கள் உடல் மற்றும் மனதின் எல்லைகளைக் கடந்து பார்க்க வேண்டும்.
பூமியிலுள்ள நீரின் அளவில் எந்த பிரச்சனையும் இல்லை - அதன் தரமும், எங்கெங்கு இருக்கிறது என்பதும், எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்கிறதா என்பதும்தான் விஷயமே. இதற்கு ஒரே உண்மையான தீர்வு, உலகில் விழிப்புணர்வின் வெள்ளத்தை உருவாக்குவதுதான்.
உங்கள் மனிதத்தன்மை பெருக்கெடுத்து ஓடினால், தெய்வீகம் இறங்கியே ஆகவேண்டும்.
தியானம் என்றால் உங்களுக்குள் உச்சபட்ச சுதந்திரத்துடன் இருப்பது.
வாழ்க்கை உள்ளிருந்து நிகழ்கிறது. நீங்கள் எந்த அளவுக்கு அந்த விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் உடல், மனம் மற்றும் வாழ்க்கை அனுபவத்தின் தரத்தை நிர்ணயிக்கிறது.
பகலிரவு சமநாள் என்பது உங்கள் உடலமைப்பிற்கு சமநிலை கொண்டுவருவதற்கான நாள் - ஏதோவொன்றுடன் அடையாளப்படாமல் வெறுமனே உயிர்த்துடிப்போடு இருப்பதற்கான நாள்.
ஆன்மீகப் பாதையில் நீங்கள் செய்யவேண்டிய முதல் விஷயம், நீங்கள் அனுபவப்பூர்வமாக இப்போது எங்கு இருக்கிறீர்கள் என்று கண்டுணர்வதுதான். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்துதான் உங்கள் பயணத்தைத் துவங்கமுடியும்.
உங்கள் உயிர் எவ்வளவு இலகுவானது என்று நீங்கள் உணர்ந்தால், அது எந்தக் கணத்திலும் தலைகீழாக மாறிவிடலாம் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் இந்த பூமியில் மிகவும் மென்மையாக நடப்பீர்கள்.
இணைத்துக்கொள்வது தான் இங்கு இருப்பதற்கு அதிக புத்திசாலித்தனமான வழி, ஏனென்றால் பிரபஞ்சம் முழுவதும் அப்படித்தான் இயங்குகிறது.
காடுகளுக்கு எந்த மாற்றும் கிடையாது. காடுகளின் வளமான சூழலியல்கள், நம் தலையீடு இல்லாமலே பல்லாயிரம் ஆண்டுகளாக செழித்து வந்துள்ளன. அவற்றை சுரண்டுவதை நிறுத்துவதற்கான நேரமிது.
ஆனந்தம்தான் வாழ்க்கைக்கான உச்சபட்ச உத்தரவாதம்.